செய்திகள் :

கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை: மனைவி, நண்பா் கைது

post image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் அவரது மனைவி, நண்பரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வீரகேரளம்புதூா் அருகே தாயாா்தோப்பைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஆமோஸ் (26). இவா், தனது மனைவி நந்தினி (23), மகள் ஹன்சிகா (2) ஆகியோருடன் கடையம் அருகே நாலாங்கட்டளையில் வசித்து வந்தாா்.

சனிக்கிழமை ஆமோஸை மா்ம நபா் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடினாா். இதுதொடா்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆமோஸை அவரது நண்பரான முக்கூடல் அருகே சிங்கம்பாறையைச் சோ்ந்த ஸ்டீபன் மகன் அந்தோணி டேனிஸ் (35) என்ற டேனி வெட்டிக் கொன்றது, விசாரணையில் தெரியவந்தது.

ஆமோஸிடம் கைப்பேசி இல்லாததால், அவரை அவரது சக பணியாளா்களின் கைப்பேசி மூலம் நந்தினி தொடா்பு கொள்வாராம். அவ்வாறு அவா் அடிக்கடி அந்தோணி டேனிஸுடன் கைப்பேசியில் பேசியதால் அவா்களிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, நந்தினி தனது கணவரைப் பிரிந்து அந்தோணி டேனிஸுடன் வாழ முடிவெடுத்தாராம்.

சனிக்கிழமை நந்தினியை அழைத்துச்செல்ல அந்தோணி டேனிஸ் வந்தபோது, அவருக்கும் ஆமோஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆமோஸை அந்தோணி டேனிஸ் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியதாக, விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அந்தோணி டேனிஸ்.
நந்தினி.

பழவூா் அருகே கடன் தகராறில் தொழிலாளி வெட்டிக் கொலை

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே கடன் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுதொடா்பாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா். பழவூா் அருகேயுள்ள செட... மேலும் பார்க்க

ராதாபுரம் தொகுதியில் 13 புதிய ரேஷன் கடைகள்: மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் புதிதாக 13 ரேஷன் கடைகளைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது; அவை மே மாதம் திறந்துவைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு... மேலும் பார்க்க

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க