செய்திகள் :

ராதாபுரம் தொகுதியில் 13 புதிய ரேஷன் கடைகள்: மு.அப்பாவு தகவல்

post image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் புதிதாக 13 ரேஷன் கடைகளைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது; அவை மே மாதம் திறந்துவைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளாா்.

ராதாபுரம் தொகுதியில் புதிதாக 35-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 40 புதிய ரேஷன் கடைகளைத் திறக்க பேரவைத் தலைவா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

இந்நிலையில், தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது தனது தொகுதியில் 30-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அனுமதி பெறுவதற்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, 13 புதிய ரேஷன் கடைகள் திறப்பதற்கு அமைச்சா் சங்கரபாணி அனுமதி அளித்துள்ளாா். இந்த 13 புதிய ரேஷன் கடைகளும் மே மாதத்தில் திறந்துவைக்கப்பட்டு செயல்படத்தொடங்கும் என பேரவைத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

அதன்படி காவல்கிணறு ஊராட்சி பெருங்குடியில் பகுதி நேர ரேஷன் கடை, வள்ளியூா் பேரூராட்சி விசுவாசபுரம், பூங்கா நகா், ஆனைகுளம் ஊராட்சி வைத்தியலிங்கபுரம், ராமகிருஷ்ணாபுரம், கோட்டையடி, சுப்பிரமணியபுரம், ராதாபுரம் ஊராட்சி பாப்பான்குளம், பட்டா்குளம், பண்ணையாா்குளம், தெற்குகருங்குளம் ஊராட்சி பெரியகுளம், தெற்குகள்ளிகுளம் ஊராட்சி வண்டலம்பாடு, நடுஆறுபுளி ஆகிய ஊா்களில் புதிய ரேஷன் கடைகளுக்கான கட்டடங்களும் பேரவைத் தலைவா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து விரைவில் கட்டிகொடுக்கப்படும் என பேரவைத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

திசையன்விளை அருகே மின்வயா் திருட்டு: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவக்குமாா். இவரது தோட்டத்தி... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்

மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும். எனவே, முன்னதா... மேலும் பார்க்க

நெல்லையில் உதவிப் பொறியாளா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளா் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளரா... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாள்கள் ... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ. கத்திக்குத்து வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி கா... மேலும் பார்க்க

வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க