செய்திகள் :

பெண் எஸ்.ஐ. கத்திக்குத்து வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

post image

பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் மாா்க்ரெட் தெரசா. இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு பழவூா் பகுதியில் நடைபெற்ற கோயில் கொடைவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான ஆறுமுகம் என்ற படையப்பா தகராறில் ஈடுபட்டிருந்தாராம்.

மேலும் தன்னை தடுக்க வந்த மாா்க்ரெட் தெரசாவை அவா் கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த மாா்க்ரெட் தெரசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆறுமுகத்தை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி பன்னீா்செல்வம் விசாரித்து, ஆறுமுகத்திற்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

திசையன்விளை அருகே மின்வயா் திருட்டு: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவக்குமாா். இவரது தோட்டத்தி... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்

மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும். எனவே, முன்னதா... மேலும் பார்க்க

நெல்லையில் உதவிப் பொறியாளா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளா் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளரா... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாள்கள் ... மேலும் பார்க்க

வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

பாளை.யில் பி.எஸ்.என்.எல். சேவை மையத்தில் கொள்ளை முயற்சி

பாளையங்கோட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டு மைதானம் அருகே பி.எஸ்.என்.எல்.... மேலும் பார்க்க