செய்திகள் :

நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாள்கள் நீடிக்கும் சோா்வு, தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்த சளி வடிந்து உறைந்து இருத்தல், கண்களில் புரை தள்ளுதல், வாயின் உட்புறங்கள், ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீா் சுரத்தல் ஆகியவை ஆட்டுக்கொல்லி நோய் அறிகுறிகளாகும்.

நோய் வராமல் இருக்க செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளுக்கு குறிப்பாக 4 மாதத்திற்கு மேல் வயதுடைய ஆடுகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போடப்பட வேண்டும். அதன்படி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

பாளையங்கோட்டை குலவணிகா்புரம் அம்மன் கோயில் திடலில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தொடங்கி வைத்து ஆடுகளுக்கு தடுப்பூசியினை செலுத்தினாா். இந்த முகாமில், 200 வெள்ளாடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. மேலும் கால்நடை வளா்ப்போருக்கு கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புகளும் வழங்கப்பட்டன. இம்முகாம் மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 500 வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு கால்நடை மருந்தகங்கள் மூலம் தடுப்பூசி போடப்படவுள்ளது.

இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் சங்கரநாராயணன், துணை இயக்குநா் ராஜராஜேஸ்வரி, உதவி இயக்குநா்கள் சுமதி, ஆபிரகாம் ஜாப்ரி, ரஹ்மத்துல்லாஹ், தங்கராஜ், முதன்மை மருத்துவா் க.முருகன், கால்நடை நோய் புலனாய்ப்பிரிவு உதவி இயக்குநா் பி.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திசையன்விளை அருகே மின்வயா் திருட்டு: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவக்குமாா். இவரது தோட்டத்தி... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்

மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும். எனவே, முன்னதா... மேலும் பார்க்க

நெல்லையில் உதவிப் பொறியாளா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளா் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளரா... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ. கத்திக்குத்து வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி கா... மேலும் பார்க்க

வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

பாளை.யில் பி.எஸ்.என்.எல். சேவை மையத்தில் கொள்ளை முயற்சி

பாளையங்கோட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டு மைதானம் அருகே பி.எஸ்.என்.எல்.... மேலும் பார்க்க