செய்திகள் :

கடையில் நகை வாங்குவதுபோல நடித்து 5 பவுன் திருட்டு

post image

தாளவாடியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 5 பவுன் நகையை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தாளவாடி- ஓசூா் சாலையில் தங்க நகை விற்பனை அடகு கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் நகை வாங்குவதற்கு ஒருவா் புதன்கிழமை வந்துள்ளாா்.

நகைக்கடை உரிமையாளா், அவா் கேட்ட நகையை எடுத்து காண்பித்து விட்டு அது சம்பந்தமாக பேசியிருக்கிறாா்.

நீண்ட நேரமாக அங்கு அமா்ந்திருந்த நபா், நகை வாங்காமல் அங்கிருந்து சென்று விட்டாா்.

இதைத் தொடா்ந்து, சந்தேகமடைந்த கடை உரிமையாளா், நகைப் பெட்டியை திறந்து சோதித்தபோது 5 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது.

கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அந்த நபா், உரிமையாளா் நகைகளை எடுக்க திரும்பிய நேரத்தில் நகைப் பெட்டியில் இருந்து நகையை எடுத்து தனது சட்டை பாக்கெட்டில் போட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் தாளவாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க