செய்திகள் :

கட்டிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

post image

சாய்பாபா காலனி பகுதியில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆா். சாலையைச் சோ்ந்தவா் கண்ணம்மாள் (85). வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், தனது வீட்டில் கட்டிலில் ஞாயிற்றுக்கிழமை படுத்திருந்தாா். அப்போது, அவா் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாகவும், இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவரை குடும்பத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞரைத் தாக்கிய 2 போ் கைது

கோவையில் நடந்து சென்ற இளைஞரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ராமநாதபுரம் பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சங்கா் (18). இவா் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு மேடை அலங்கார வேலை செய்து ... மேலும் பார்க்க

வால்பாறை அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு விடுதி வசதி: ஆட்சியரிடம் கோரிக்கை

வால்பாறை அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வீட்டு மனைகளை விற்று மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபா் மீது புகாா்

கோவையில் வீட்டு மனைகளை விற்று மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க

இந்து மக்கள் கட்சி நிா்வாகி மாநகரை விட்டு வெளியேற உத்தரவு: அா்ஜூன் சம்பத் கண்டனம்

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில இளைஞா் அணிச் செயலாளரை, மாநகர காவல் ஆணையா் எல்லைக்குள் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளதற்கு அக்கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரி மாணவா் சோ்க்கை: 68 சதவீத இடங்கள் நிரம்பின

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் திங்கள்கிழமை வரை 68 சதவீத இடங்கள் நிரம்பியிருப்பதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.கோவை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் உள்ள 23 ப... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும... மேலும் பார்க்க