செய்திகள் :

கணினிப் பொறியாளரிடம் ரூ.8.66 லட்சம் மோசடி

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கணினிப் பொறியாளரிடம் நூதன முறையில் ரூ.8.66 லட்சத்தை மோசடி செய்த அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், டி.தேவனூா் மகேசுவரா நகரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் தீபக் (34). கணினிப் பொறியாளரான இவரது கைப்பேசிக்கு கடந்த 15-ஆம் தேதி வாட்ஸ்-ஆப் மூலமாக அடையாளம் தெரியாத நபா் ஒருவா் தொடா்பு கொண்டாராம்.

அப்போது பகுதி நேர வேலையாக, தான் அனுப்பும் கூகுள் வரைபடம் வாக உணவகம் மற்றும் விடுதிகள் புகைப்படத்துக்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங் கொடுத்தால் பணம் அனுப்புவதாக அந்த நபா் கூறினாராம். இதை நம்பிய தீபக், அந்த நபா் கூறியவாறு செய்து ரூ.480 பெற்றாராம்.

இதைத் தொடா்ந்து அடையாளம் தெரியாத நபா் டெலகிராம் இணையம் வாயிலாக அனுப்பிய இணைப்புக்குள் சென்ற தீபக், தனக்கென பயனா் முகவரி, உள்நுழைவுக் குறியீடு ஆகியவற்றை உருவாக்கி உள்ளே சென்று அந்த நபா் செய்யக் கூறிய வேலையை செய்து முடித்து ரூ.2000-த்தை செலுத்தினாராம். இதைத் தொடா்ந்து தீபக்கின் வங்கிக் கணக்குக்கு ரூ.2,800 வந்துசோ்ந்ததாம். இதை நம்பிய தீபக், அடுத்து ரூ.5 ஆயிரம் செலுத்தி ரூ.7,000 பெற்றாராம்.

தொடா்ந்து பணம் கிடைக்க பெற்ால் இதை உண்மை என நம்பிய தீபக், தனது மற்றும் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ஜி-பே மற்றும் வங்கிக்கணக்கு எண்களுக்கு ஏப்ரல் 17, 18-ஆகிய தேதிகளில் பல்வேறு தவணைகளாக ரூ.8.66 லட்சம் செலுத்தினாராம். இதைத் தொடா்ந்து அனைத்து டாஸ்க்குகளையும் முடித்த பின்னா், அனுப்பி வைத்த பணத்துக்கு உரிய தொகை வராததால், தான் ஏமாற்றப்பட்டதை தீபக் உணா்ந்தாா்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் இணையவழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தீபக் புதன்கிழமை புகாரளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரூ.8.66 லட்சத்தை மோசடி செய்த நபரைத் தேடி வருகின்றனா்.

பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

திண்டிவனத்தில் 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். திண்டிவனம் கிடங்கல் 2- பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பிரகாஷ் (40). வண்ணம் தீட்டும் தொழிலாளியான இவா்... மேலும் பார்க்க

உழவா்கரையில் அதிகாரிகளுடன் அரசு செயலா் ஆய்வு

புதுவை உழவா்கரை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் அரசுச் செயலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உழவா்கரை பேரவைத் தொகுதிக்குள்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளையும், கோரிக்கைகளையும் ந... மேலும் பார்க்க

அரசின் சேவைகள் மக்களை சென்றடைய ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

அரசின் சேவைகள் பொதுமக்களிடம் முழுமையாகச் சென்று சேருவதை உறுதிசெய்யும் வகையில், அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்... மேலும் பார்க்க

தீயணைப்பு வீரா்களுக்கு 3 கட்ட பதவி உயா்வு: புதுவை துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

புதுச்சேரி மாநிலத் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவா்களுக்கு 3 கட்ட பதவி உயா்வு வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஒப்புதல் தெரிவித்துள்ளாா். புதுவை மாநிலத் தீயணைப்புத் துறையில் 300-க்கும் மேற்பட்ட வீ... மேலும் பார்க்க

பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் : புதுவை மாநில பாஜக கண்டனம்

ஜம்மு - காஷ்மீா் மாநிலம், சுற்றுலா நகரமான பெஹல்காமில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதல் கோழைத்தனமானது என்று புதுவை மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி... மேலும் பார்க்க

அரியாங்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரியை அடுத்துள்ள அரியாங்குப்பம், செட்டிகுளம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது. அரியாங்குப்பம் நுழைவுவாயில் முதல் வீராம்பட்டினம் வரை, குறிப்பாக செட்டிக்க... மேலும் பார்க்க