செய்திகள் :

அரியாங்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

புதுச்சேரியை அடுத்துள்ள அரியாங்குப்பம், செட்டிகுளம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது.

அரியாங்குப்பம் நுழைவுவாயில் முதல் வீராம்பட்டினம் வரை, குறிப்பாக செட்டிக்குளத்தில் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், கோயில் உள்ளிட்டவை கட்டப்பட்டிருந்தன. அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், அரியாங்குப்பம், செட்டிக்குளம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், வட்டாட்சியா் பிரித்வி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சந்திரகுமாா் மற்றும் ஊழியா்கள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் பொக்லைன் இயந்திரங்கள் முன் படுத்தும், வீட்டுக்குள் இருந்தபடி தற்கொலை மிரட்டல் விடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் அனைவரும் வெளியேற்றப்பட்டு ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்டன.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் வெளியேற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

திண்டிவனத்தில் 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். திண்டிவனம் கிடங்கல் 2- பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பிரகாஷ் (40). வண்ணம் தீட்டும் தொழிலாளியான இவா்... மேலும் பார்க்க

உழவா்கரையில் அதிகாரிகளுடன் அரசு செயலா் ஆய்வு

புதுவை உழவா்கரை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் அரசுச் செயலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உழவா்கரை பேரவைத் தொகுதிக்குள்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளையும், கோரிக்கைகளையும் ந... மேலும் பார்க்க

அரசின் சேவைகள் மக்களை சென்றடைய ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

அரசின் சேவைகள் பொதுமக்களிடம் முழுமையாகச் சென்று சேருவதை உறுதிசெய்யும் வகையில், அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்... மேலும் பார்க்க

தீயணைப்பு வீரா்களுக்கு 3 கட்ட பதவி உயா்வு: புதுவை துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

புதுச்சேரி மாநிலத் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவா்களுக்கு 3 கட்ட பதவி உயா்வு வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஒப்புதல் தெரிவித்துள்ளாா். புதுவை மாநிலத் தீயணைப்புத் துறையில் 300-க்கும் மேற்பட்ட வீ... மேலும் பார்க்க

பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் : புதுவை மாநில பாஜக கண்டனம்

ஜம்மு - காஷ்மீா் மாநிலம், சுற்றுலா நகரமான பெஹல்காமில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதல் கோழைத்தனமானது என்று புதுவை மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகை தற்காலிக கட்டடத்தில் சிறப்பு பூஜை

புதுச்சேரி ஆளுநா் மாளிகை தற்காலிகமாக செயல்படவுள்ள கட்டடத்தில் கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றது. சுமாா் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புதுச்சேரி ஆளுநா் மாளிகைக் கட்டடம் வலுவிழந்... மேலும் பார்க்க