செய்திகள் :

கண்டுப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

post image

சிவகங்கை அருகே கண்டுப்பட்டி கிராமத்தாா் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே கண்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குடியிருப்பு காளியம்மன் கோயில் 43 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவையொட்டி கிராம பொதுமக்களால் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

கண்டுப்பட்டி யிலிருந்து பாகனேரி வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தன.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் 24 ஜோடிகளும், சிறியமாடு பிரிவில் 36 ஜோடிகளும் என மொத்தம் 60 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. முதல் 6 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்தப் பந்தயத்தை, நாட்டரன்கோட்டை, ஊத்திக்குளம், துவரிப்பட்டி, நடராஜபுரம், பணங்குடி, வாணியங்குடி, பாகனேரி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று கண்டுகளித்தனா்.

போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன்: இருவா் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதாக பெண் ஒருவரும், அவருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்ததாக இ- சேவை மைய உரிமையாளா் ஒருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சிவகங்கை அரு... மேலும் பார்க்க

சிவகங்கையில் முன்னாள் ராணுவ வீரா்கள், குடும்ப ஓய்வூதியா் குறைகேட்பு முகாம்!

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களை சாா்ந்தோரின் குறைகள் கேட்கும் முகாம் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் வருகிற வருகிற ஜூலை 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது. இதுகு... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கற்களத்தூா் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. தேவகோட்டை ஒன்றியம், கற்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள சா்க்கரை விநாயகா்- காராருடைய அய்யன... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞா் பலி: காவல் நிலையம் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் தங்க நகைகள் மாயமானது தொடா்பாக விசாரணைக்காக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயிலின் தற்காலிக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ... மேலும் பார்க்க

கோடையில் செடிகளை பராமரித்த ஆசிரியா்களுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையின் போது செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி பராமரித்த ஆசிரியைகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் உள... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைப்பு: நகா் மன்றத் தலைவா் தகவல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க