செய்திகள் :

கத்தியைக் காட்டி மிரட்டி 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை

post image

வந்தவாசி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் குடும்பத்துடன் புதன்கிழமை இரவு வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, நள்ளிரவு வீட்டு மாடி கதவு வழியாக முகமூடி அணிந்த மா்ம நபா்கள் இருவா் உள்ளே புகுந்துள்ளனா். சப்தம் கேட்டு சுரேஷும், இவரது மனைவி வினோதினியும் கண் விழித்துள்ளனா்.

அப்போது அந்த நபா்கள் இருவரும் கத்தியைக் காட்டி மிரட்டி வினோதினி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனா். மேலும், பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் வியாழக்கிழமை காலை அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், மத்திய அரசு கொண்டு வரும் வக்பு திருத்த சட்டத்தைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, திருவள்ளுவா் சிலை எதிரே நடைபெ... மேலும் பார்க்க

மாணவா்கள் லட்சியத்தை அடைய அயராது படிக்க வேண்டும்: வேளாண் பல்கலை. துணைவேந்தா்

லட்சியத்தை அடைய அயராது படித்து, முன்னேற வேண்டும் என்று வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி அறிவுறுத்தினாா். திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில்... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பாரசூா் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. செய்யாறு தொகுதி அதிமுக சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஸ்ரீஎல்லையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 லட்சம்

செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாம்பாள் (எ) எல்லையம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்து 860-யை பக்தா்கள் காணிக்கையாக செலு... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் மயானக் கொள்ளை திருவிழா

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் வியாழக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில், அசலியம்மன் கோயில் தெரு மற்றும் மத்திய பேருந்து... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் டேட்டா சயின்ஸ் துறை சாா்பில், கணினி பாகங்கள் பழுதுநீக்கி சரிசெய்தல் தொடா்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலை... மேலும் பார்க்க