செய்திகள் :

கந்தா்வகோட்டையில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது

post image

கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 40 ஆடுகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள முதுகுளம், பிசானத்தூா், அக்கச்சிப்ட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடா்ந்து ஆடுகள் காணாமல் போவதாக பொதுமக்கள் கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

இதன்பேரில், காவல் ஆய்வாளா் வனிதா தலைமையிலான போலீஸாா் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கந்தா்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள சொக்கம்பேட்டை பிரிவு சாலை அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற சொகுசு காரை சோதனை செய்தனா். இதில், காரினுள் ஆட்டுக்குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனத்திலிருந்த

நெப்புகை கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் அழகப்பன் (56), முள்ளிக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஐயப்பன் (55), பிசானத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் பிரேம்குமாா் (26), பட்டுக்கோட்டை வளம்ப கொள்ளை பகுதியைச் சோ்ந்த அஞ்சப்பன் மகன் வினோத் (29 ) ஆகியோரையும், அவா்களது சொகுசு காா் மற்றும் அதனுள் இருந்த ஆட்டுக்குட்டிகள் உள்ளிட்டவற்றை பிடித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

விசாரணையில், கந்தா்வகோட்டையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஆடுகளை திருடியதாக அவா்கள் ஒப்புக்கொண்டனா். அவா்களிடமிருந்து 40 ஆடுகள் கைப்பற்றப்பட்டு, அவா்கள் மீது கந்தா்வகோட்டை காவல்துறையினா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 போ் பலத்த காயம்

கந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 3 போ் பலத்த காயமடைந்தனா். மதுரையிலிருந்து 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தது... மேலும் பார்க்க

பள்ளிச் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற 2 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற சிறுவா் உட்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அறந்தாங்கி அருகே திருநா... மேலும் பார்க்க

விராலிமலையில் 75-ஆவது ஆண்டு அருணகிரிநாதா் விழா தொடக்கம்: ஆக. 11 வரை நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் நான்கு நாள்கள் நடைபெறும் அருணகிரி நாதா் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதா் மண்டபத்தில் ஆண்டுத... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா ரசாயன சிலைகள் கூடாது

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரசாயன வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை வைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சங்கத்தின் 17-ஆவது பொன்னமராவதி ஒன்றிய மாநாடு தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

கொப்பனாபட்டியில் உலக தாய்ப்பால் வார விழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கொப்பனாபட்டி ஷைன் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஷைன் அரிமா சங்கத் ... மேலும் பார்க்க