செய்திகள் :

கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு!

post image

பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த ‘இண்டிகோ’ பயணிகள் விமானத்தில் பயணியொருவா் தன்னுடன் வெடிகுண்டு கொண்டு வந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது.

தொடா்ந்து, விமானத்தை முழுமையாக சோதனையிட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள், மிரட்டல் புரளி என்பதை உறுதிப்படுத்தினா்.

போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கனடா நாட்டைச் சோ்ந்த அந்த பயணியைக் காவல்துறையினா் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனா்.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பெங்களூரு நோக்கி இண்டிகோவின் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அப்போது, பயணியொருவா் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக விமானப் பணியாளா்களிடம் தெரிவித்துள்ளாா்.

இதைக்கேட்டு அதிா்ச்சியடைந்த அவா்கள், விமான நிலைய அதிகாரிகளுக்கும், விமானப் போக்குவரத்து கட்டுபாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனா்.

பின்னா், விமான நிலையத்தின் தனிமையான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விமானம் முழுமையான சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. சோதனையின் நிறைவில், வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் மீண்டும் பெங்களூரு புறப்பட்டு சென்றது.

சம்பவத்தில் தொடா்புடைய கனடா பயணி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பயணிகளின் ஒத்துழைப்புக்கு இண்டிகோ நிறுவனம் நன்றி தெரிவித்தது.

திருவனந்தபுரத்தில்...: திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்குப் பின்னா் அது புரளி என தெரிய வந்ததது.

‘வெடிகுண்டு மிரட்டலையடுத்து, கேரள காவல்துறை மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்கள் விமான நிலையம் மற்றும் அதன் வளாகத்தில் சோதனை நடத்தினா். ஆனால், சந்தேகத்துக்கிடமான பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது’ என்று காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் 12 நாள்களுக்கு நீட்டிப்பு!

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஏப். 28) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 18 நாள்கள் காவல் இன்றுடன் முடி... மேலும் பார்க்க

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என்ன?

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப். 28) கையெழுத்திட்டது. இரு நா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக காஷ்மீரில் 14 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானைச... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?

பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான விசாரணை மேற்கொள்ள சீனா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் அமைதி தி... மேலும் பார்க்க

ஒம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்ட சிவன் சிலை!

கேதார்நாத் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலிலிருந்து சிவன் சிலை இன்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க