செய்திகள் :

கனடா பிரதமர் கார்னியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

post image

ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களைச் சந்திப்பதற்காக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கனடா தலைமையில் ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் 2 நாள்கள் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாடு நேற்று(ஜூன் 17) நிறைவடைந்தது.

கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளையில், கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் ஜி7 கூட்டமைப்பைச் சேராத இந்திய பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.

கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் நட்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் அருமையான சந்திப்பு இருந்தது. ஜி7 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ள கனட அரசுக்கு வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையில் வலிமையாக இணைந்துள்ளன.

பிரதமர் கார்னியும் நானும் இணைந்து இந்தியா - கனடாவுக்கு இடையேயான நட்புறவுக்கு வலிமை சேர்க்க நெருக்கத்துடன் பணியாற்றுவோம். வர்த்தகம், எரிசக்தி, விண்வெளி, சுத்தமான எரிசக்தி, முக்கியமான கனிமங்கள், உரங்கள் போன்றவற்றில் இணைந்து பணியாற்றவிருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தற்போது குரோஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிக்க | போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை! - டிரம்ப்பிடம் மோடி பேச்சு

பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் பேசியது என்ன? டிரம்ப் பேட்டி

பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்பின்போது பேசியது என்ன என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் 5 நாள்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவு... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! தடம் புரண்ட பெட்டிகள்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து அதன் பாதையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டன. பெஷாவரிலிருந்து பலுசிஸ்தானின் குவேட்டா நோக்கி ஜாஃபர் எக்ஸ... மேலும் பார்க்க

ஈரான் ஒருபோதும் சரணடையாது: டிரம்ப்புக்கு கேமேனி பதில்

இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரான் ஒருபோதும் சரணடையாது என அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலை... மேலும் பார்க்க

பி-2 பாம்பர்ஸ் விமானங்கள் புறப்பட்டன? ஈரானின் நிலவறைகளை அழிக்கத் திட்டமா?

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் ஈரானின் அணுசக்தி உற்பத்தி நிலவறைகளை அழிக்கப் புறப்பட்டிருக்கலாம்.ஏனெனில், இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா என்ற தீவில் நிறுத்திவை... மேலும் பார்க்க

2024-ல் டிரம்பை ஆதரித்த வாக்காளர்களில் 64% பேர் போருக்கு எதிராக உள்ளனர்!

இஸ்ரேல் - ஈரான் போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 சதவீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் ... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! மக்கள் வெளியேற்றம்.. விமானங்கள் ரத்து!

இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்து அப்பகுதி முழுவதும் சாம்பல் படலம் மற்றும் புகைப் பரவியதால், அங்குள்ள ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தோனே... மேலும் பார்க்க