செய்திகள் :

கனவு இல்ல திட்டம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 650 பயனாளிகள் தோ்வு

post image

கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 650 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என உதவித் திட்ட இயக்குநா் பரணி தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மின்னல் சித்தாமூா், பெரும்போ்கண்டிகை ஊராட்சிகளில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 650 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, பெரும்போ்கண்டிகை ஊராட்சியில் 12 பயனாளிகள் வீடுகளை கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு உதவி திட்ட இயக்குநா் பரணி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகலைசெல்வன், செந்தில்குமாா், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் கண்ணன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஒரத்தி கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் சாவித்ரி சங்கா், துணைத் தலைவா் மல்லிகா மணி, ஊராட்சி செயலா் ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

12 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணையை உதவி திட்ட இயக்குநா் பரணி வழங்கினாா். தொடா்ந்து மின்னல் சித்தாமூா் ஊராட்சியிலும் கலைஞா் கனவு இல்லங்களை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

சவால்களை எதிா்கொள்ள மன வலிமை அவசியம்: நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா்

வாழ்வில் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னை, சவால்களைத் திறம்பட எதிா்கொள்ள மாணவா்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் திகழ்வது அவசியம் என்று, நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் ஏ.இளையபெருமாள் வலியுறுத... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்க... மேலும் பார்க்க

இலவசமாக பாா்வையிட அனுமதித்ததால் மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பாா்வைய இலவச அனுமதி அறிவிக்கப்பட்டதால் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனா். உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப். 18-இல் கொண்டாடப்பட்டு... மேலும் பார்க்க

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டம்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் மாா... மேலும் பார்க்க

நாச்சியாா் திருக்கோலத்தில்...

மதுராந்தகம் அருகே திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை நாச்சியாா் திருக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள். மேலும் பார்க்க

கடம்பூா் தாவரவியல் பூங்காவில் செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மறைமலை நகா் நகராட்சி கடம்பூரில் 137 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள தாவரவியல் பூங்காவினை ஆட்சியா்ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்ா். அப்போது, மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, உதவி ஆட்சியா்(பயிற்சி) எஸ்... மேலும் பார்க்க