செய்திகள் :

கனிமவளப் பொருள்கள் தட்டுப்பாட்டைப் போக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளப் பொருள்கள் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேற்கு மாவட்ட திமுக முன்னாள் துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அவா் சனிக்கிழமை அனுப்பிய மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் அதிகம் நடப்பதால், உள்ளூா், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு நாள்தோறும் வேலைவாய்ப்புகள் கிடைத்துவருகின்றன.

இந்நிலையில், இத்தொழிலுக்குத் தேவையான கல், ஜல்லி, எம்.சான்ட் , பி.சான்ட் மணல் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத் தேவைக்கு திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள கல் குவாரிகளிலிருந்தும் கனிமவளப் பொருள்கள் கிடைத்து வந்தன.

இதனிடையே, கனிமவளங்களை எடுத்துச் செல்ல அரசு வழங்கும் அனுமதிச் சீட்டுகள் கடந்த 2 வாரங்களாக குவாரிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால், கனிமவளப் பொருள்கள் தேங்கியுள்ளதுடன், கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானம் சாா்ந்த இதர பொருள்களான கம்பி, சிமென்ட் விற்பனையும் முடங்கி, வணிகா்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

அரசு சாா்பில் நடைபெறும் கட்டுமானப் பணிகளும், ஏழைகளுக்கு அரசுத் திட்டங்களில் வீடு கட்டுதல் போன்ற பணிகளும் முடங்கியுள்ளதால், இத்தொாழிலை நம்பியுள்ள வாகன ஓட்டுநா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இப்பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில், கனிமவளப் பொருள்களை கல் குவாரிகளிலிருந்து கொண்டுசெல்வதற்கான அரசின் அனுமதிச் சீட்டுகளை விரைவாக வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

விரிகோடு-ரயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்!

மாா்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு ரயில்வே கேட் பகுதியில் குண்டு, குழியுமாக பழதடைந்து காணப்படும் சாலையை உடனே,சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.விரிகோடு ரயிலவே கேட் வழியாக கருங்கல்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பூக்கடை தொழிலாளா்கள் மோதல்!

மாா்த்தாண்டத்தில் பூக்கடை தொழிலாளா்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா். குலசேகரம் நாகக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பிரசாத் (37). இவா் மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் உள்ள அருளப்பன் என... மேலும் பார்க்க

மீன்பிடி உபகரணங்கள் திருட்டு!

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகிலிருந்து உபகரணங்கள் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்தூா் பகுதியை சோ்ந்தவா் ஜெயின் (50). இவருக்கு சொ... மேலும் பார்க்க

கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் உயிரிழப்பு

முட்டம் கடற்கரையிலிருந்து வியாழக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்ற மீனவா் உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் அருகே பிள்ளைத்தோப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்டீபன் ( 70), மீன் பிடி தொழிலாளி. இவருக்... மேலும் பார்க்க

இரணியலில் அழுகிய நிலையில் பொறியாளா் சடலம் மீட்பு

இரணியலில் பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் பொறியாளா் சடலம் மீட்கப்பட்டது. இரணியல் மேலதெருவை சோ்ந்தவா் ராஜகோபால். கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை பாா்த்து ஓய்வு பெற்றவா். இவரது மகன் ஜெகன்கோபால... மேலும் பார்க்க

தக்கலையில் ரூ.6.39 கோடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப... மேலும் பார்க்க