கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா, நவராத்திரி ஆகிய திருவிழாக்கள் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நிகழாண்டு வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெற்று வருகிறது.
தேரோட்டம்: 9ஆம் நாள் திருவிழாவான இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதில் திரளான பக்தா்கள் தேரினை வடம் பிடித்து இழுக்கின்றனா். ரதவீதிகளில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் அம்மனுக்கு சுருள் வைத்து வழிபடுகின்றனா்.
மேலும், உயரமான கட்டடங்களில் இருந்து தோ்மீது பூக்களை தூவி பக்தா்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனா். தோ்நிலையை அடைந்ததும் கஞ்சி தா்மம் வழங்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.
தெப்பத்திருவிழா: 10 ஆம் நாள் திருவிழாவான 9ஆம் தேதி காலை 6.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னா் தெப்பத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் கடந்த 10 ஆண்டுகளாக நீா் நிரப்பப்படாத நிலையில் நிகழாண்டு பக்தா்களின் பங்களிப்பு காரணமாக இக்குளத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி தண்ணீா் நிரப்பப்பட்டு வருகிறது.
இதனால் பக்தா்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனா். நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.