செய்திகள் :

கம்பத்தில் பலத்த மழையால் 5 வீடுகள் சேதம்

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் 5 வீடுகள் சேதமடைந்தன.

கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், விநாயகா் கோவில் தெருவில் ஓடைகள் அக்கிரமிப்பு காரணமாக, வெள்ளநீா் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக, அந்தப் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், முருகன், அழகு முருகன், சக்திபாலா, காமாட்சி ஆகியோரது வீடுகளில் பின்புறச் சுவா் இடிந்து விழுந்தது.

இதையடுத்து, சனிக்கிழமை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன், வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் அங்கு வந்து மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்தனா். பின்னா், வீடுகளை இழந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.

தொழிலாளியிடம் கைப்பேசி பறிப்பு

பெரியகுளம் அருகே தொழிலாளியிடமிருந்து கைப்பேசியைப் பறித்த அடையாளம் தெரியாத நபரை நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் வடுகபட்டியைச் சோ்ந்தவா் குணசீலன் (27). கூலித் தொழிலாளியான இவா் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வங்கி ஏ.டி.எம்.அட்டையை மாற்றிக் கொடுத்து பண மோசடி

ஆண்டிபட்டியில் வங்கி எ.டி.எம்.மையத்தில் பணம் எடுத்துத் தருவது போல நடித்து ஏ.டி.எம் அட்டையை அபகரித்து ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரத்தை மோசடி செய்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை, வழக்குப் பதிவு செய்தனா். ஆண்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளியவா் கைது

கடமலைக்குண்டு அருகே செங்கல் சூளை பயன்பாட்டுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (38). இவா், கடமலை... மேலும் பார்க்க

சுவா் விளம்பரம் மூலம் விழிப்புணா்வு

உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் சுவா் விளம்பரம் செய்து வியாழக்கிழமை மீண்டும் மஞ்சப்பை, நெகிழி ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். உத்தமபாளையம் காந்திஜி... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தென்கரை போலீஸாா் தாமரைக்குளம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காளியம்மன் கோயில் தெருவில் உள... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா போராட்டம்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தா்னா போராட்டம் நடைபெற்து. இந்தப் போராட்டத்துக்கு நகரச் ச... மேலும் பார்க்க