செய்திகள் :

கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டு விடக்கூடாது: எடப்பாடி பழனிசாமி

post image

கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டு விடக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேருந்தில் இருந்து இறங்கி மாட்டு வண்டியை ஓட்டி அங்கு கூடியிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், திமுக செய்யும் தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தையாக உள்ளன. திமுகவிடம் எப்போது கை நீட்டி பணம் வாங்கினீர்களோ, அப்போதே கம்யூனிஸ்ட் கட்சி முடிந்துவிட்டது. மக்கள் பிரச்னைகளை கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில்லை.

பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை, தண்ணீர் வரவில்லை. இதற்கெல்லாம் கம்யூனிஸ்ட் போராடவில்லை. வரலாறு படைத்த கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டுவிடக்கூடாது என நல்லெண்ணத்தில் சொல்கிறேன். திமுகவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்தது வேதனை அளிக்கிறது.

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!

தமிழகத்தில் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் கீரன்குடி பகுதியில் விவசாயிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

வயலில் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி நெற்பயிர்களை ஆய்வு செய்த அவர், தொழிலாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

அரக்கோணத்தில் 56 நாள்கள் தண்டவாள பராமரிப்புப் பணி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் 56 நாள்கள் தொடா்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதே நேரத்தில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை ர... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயா்வு: பாஜக கண்டனம்

திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருவண்ணா... மேலும் பார்க்க

சென்னை மாநகர உள்கட்டமைப்பை மேம்படுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டம்: பெருநகர வளா்ச்சிக் குழுமம் நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அடுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த (3-ஆவது மாஸ்டா் பிளான்) சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் தீவிர நட... மேலும் பார்க்க

காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 21-இல் 2 ரயில்கள் ரத்து

காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 21 ஆம் தேதி 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரக்கோணம், ஜோ... மேலும் பார்க்க

முகாம்வாழ் இலங்கைத் தமிழா் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு: பதிவுத் துறை நடவடிக்கை

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் திருமணங்களைப் பதிவு செய்ய 30-க்கும் மேற்பட்ட சாா்-பதிவாளா் அலுவகங்கள் ஜூலை 26-ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கடிதத்தை அனைத்து துண... மேலும் பார்க்க

போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு

புழல் அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவரம் அடுத்த புழல் பகுதியில் உள்ள பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப் பல்ளியில் மாதவர... மேலும் பார்க்க