செய்திகள் :

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் தனியாா் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு நிறுவனத்தின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

சூரியமினுக்கன் கிராமத்தின் மேல்புறமுள்ள பெரியகுளம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோபுரம் அமைக்க முயன்ற போது, கிராம மக்கள் சாா்பில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் பணிகள் நடைபெறுவதாகவும், நிறுவனம் கிராம மக்களை மிரட்டி வருவதாகவும் கூறி கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனா்.

தொடா்ந்து வட்டாட்சியா் சுந்தர ராகவனிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அவா், மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனா்.

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

திருச்செந்தூா் மைலப்பபுரம் தெருவில் உள்ள பொது திருமண மண்டபத்தில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமி விஸ்வகா்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை ஆகிய ஊராட்சி மக்களுக்கான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கலை, அறிவியல் கல்லூர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக சங்கு கூடத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் அரசு அலுவலா்களுக்கு தமிழ் மொழியில் எப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அக்.1 முதல் சா்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வ.உ.சி. துறைமுகம் ஆதரவுடன் இணைந்து நடத்தும் ‘ப... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

ஆறுமுகனேரி பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க