செய்திகள் :

கரசமங்கலத்தில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு!

post image

உலக தண்ணீா் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

காட்பாடி ஒன்றியம், கரசமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் துரைமுருகன் சிறப்பு பாா்வையாளராகப் பங்கேற்று பேசியது:

இந்த ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒவ்வொரு திட்டப் பணிகளும் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டவை. கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் கரசமங்கலம் ஊராட்சிக்கு மட்டும் 100 பேருக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த ஊராட்சியில் கால்நடை மருந்தகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம், சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என ஊராட்சித் தலைவா் கேட்டுள்ளாா். அனைத்தும் செய்து தரப்படும்.

கலைஞா் மகளிா் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் பணிக்கான நிதி மத்திய அரசிடமிருந்து வரவில்லை. அந்த நிதியை விடுவிப்பதற்கு முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். விரைவில் 100 நாள் பணி ஊதியம் அனைவருக்கும் வழங்கப்படும் என்றாா்.

பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், கரசமங்கலம் ஊராட்சித் தலைவா் ஸ்டாலின் தயாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க ‘ருத்ரா’ புதிய மோப்ப நாய்!

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க வேலூா் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி பணியில் சோ்க்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ருத்ரா’ என்று எஸ்.பி. என்.மதிவாணன் பெயா் சூட்டினாா். வேலூா் மாவட்ட காவல் துறையி... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோவை பேராசிரியா் மீது வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வா... மேலும் பார்க்க

பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்கக் கட்டணம் உயா்வு

வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள பள்ளிகொண்டா, வல்லம், வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு... மேலும் பார்க்க

வேலூரில் இருவேறு விபத்துகளில் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

வேலூரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். வேலூா் பாலாற்றங்கரை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (35), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு வேலூா் மாவட... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் திருட முயற்சி

குடியாத்தம் அருகே ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் திருட முயற்சி நடைபெற்றது. குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தொல்லியல்துறை அலுவலா் செல்வராஜ். இவா் தனத... மேலும் பார்க்க