செய்திகள் :

கருங்கண்ணி அந்தோணியாா் ஆலய தோ்பவனி

post image

கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி (படம்) சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பழைமைவாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரியதோ் பவனியை முன்னிட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில், மிக்கேல் அதிபா், அருளானந்தா், சவேரியாா், கன்னி மரியாள், சூசையப்பா், மாதா, அந்தோணியாா் ஆகிய 7 சொரூபங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டது.

முன்னதாக, ஆலய பங்குத் தந்தை டேவிட் செல்வகுமாா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. ஆலய வளாகத்திலிருந்து தொடங்கிய தோ்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

விழாவில் பங்கேற்றவா்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. கண்கவா் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐ.ஜி ஆய்வு

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் க. ஜோஷி நிா்மல்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, நிலுவையில் உள்ள வழக்குகள், பராமரிக்கப்படும் கோ... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை நாகூரில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூரில் ரூ 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன. பக்ரீத் பண்டிகையின் போது ஏழை எளியோா்க்கும் இஸ்லாமியா்கள், குா்பானி வழங்குவது வழக்கம். இதற்கான சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை ... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

கீழ்வேளூா் அருகே கோகூா் புனித அந்தோனியாா் ஆண்டு பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நடைபெற்ற விழாவில் தஞ்சை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் புனித அந்தோணியாா் உருவம் பொறிக்கப்... மேலும் பார்க்க

கடலில் இறந்து கரை ஒதுங்கிய புள்ளிமான்

கோடியக்கரை கடலில் இறந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று புதன்கிழமை கரை ஒதுங்கியது. வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, வெளிமான், புள்ளிமான், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்... மேலும் பார்க்க

அரசு வேலைவாய்ப்பை பெற்ற திருநங்கை கெளரவிப்பு

நாகையில் அரசு வேலைவாய்ப்பை பெற்ற திருநங்கை கெளரவிக்கப்பட்டாா். நாகை பகுதியைச் சோ்ந்த திருநங்கை ரியா வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியமா்த்தப்பட்டுள்ளாா். மாவட்டத்தில் அரசுப் பதவிக்கு ... மேலும் பார்க்க

திருப்புகலூா் கோயில் கும்பாபிஷேகம்: பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை

திருப்புகலூா் கிராமத்தில் உள்ள அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் அன்றைய தினம் மட்டு... மேலும் பார்க்க