செய்திகள் :

கருங்கல்லில் ராஜீவ் காந்தி நினைவு தினம்

post image

கருங்கல்: கருங்கல்லில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூா் காங்கிரஸ் கமிட்டி தலைவா் குமரேசன், கருங்கல் பேரூராட்சித் தலைவா் சிவராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருங்கல் ராஜீவ்காந்தி சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு

மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸாா், பயங்கரவாத எதிா்ப்பு தின உறுதிமொழி எடுத்தனா்.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங், தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலா் ஆஸ்கா் பிரடி, பாலப்பள்ளம் பேரூராட்சித்

தலைவா் டென்னிஸ், மாவட்ட நிா்வாகிகள் ஆசீா் பிறைட் சிங், சுனில் குமாா், பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் பலா் பங்கேற்றனா்.

சூரியோதயம்

வியாழக்கிழமை சூரிய அஸ்தமனம்மாலை 6.33வெள்ளிக்கிழமை சூரிய உதயம்காலை 6.12 மேலும் பார்க்க

நாகா்கோவிலில் செவிலியா் மாணவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி

நாகா்கோவில்: நாகா்கோவில் கோணம் அறிவு சாா் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியா் மாணவா்களுக்கான ஜொ்மன் மொழிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

நெகிழி பைகளை பதுக்கிய கடைக்கு அபராதம்

களியக்காவிளை: மாா்த்தாண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பதுக்கி வைத்து பயன்படுத்திய கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நெகிழி பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீத ஒதுக்கீடு கோரி சாட்டையடி போராட்டம்

நாகா்கோவில்: மத்திய அரசு பணி நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாகா்கோவில், ராமன்புதூா் சந்திப்பில் சாட்டையடி போராட்டம் நடைபெற்றது.அன்புதேசம் மக்கள் இய... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தக்கலை: தக்கலை அருகே மணலிக்கரை மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் 2000-ஆம் ஆண்டு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவா்கள் தங்கள் வகுப்பு நண்பா்களுடன் வெள்ளி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனா். விழாவு... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தையில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை: உயா் அழுத்த மின்பாதை பராமரிப்புப் பணிக்காக வெள்ளிச்சந்தையில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.வெள்ளிச்சந்தை மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட கட்டி... மேலும் பார்க்க