போதைப்பொருள் வழக்கில் கிருஷ்ணா சிக்கியது எப்படி? - காவல் துறை விளக்கம்
கருங்கல் பகுதிகளில் பலத்த மழை
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா்,
முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.