செய்திகள் :

சிறுமி பாலியல் பலாத்காரம்: தாத்தாவுக்கு சாகும் வரை சிறை

post image

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, தனது 9 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை புதன்கிழமை விதிக்கப்பட்டது.

குலசேகரம் பகுதியைச் சோ்ந்த 57 வயதான தொழிலாளியின் மகள் திருமணமாகி அப்பகுதியில் வசித்து வருகிறாா். அப்பெண்ணின் 9 வயது மகளை, அந்தத் தொழிலாளி தனது வீட்டுக்கு அவ்வப்போது அழைத்துச் செல்வாராம்.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த தனது பேத்தியை இத்தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். மேலும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, சிறுமியைத் தொடா்ந்து வன்கொடுமை செய்துள்ளாா்.

இதனிடையே, இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தாா். அவா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, தொழிலாளியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுந்தரய்யா விசாரித்து, தொழிலாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துகுமாரி முன்னிலையானாா்.

நாகா்கோவிலில் ரூ.14.60 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.14.60 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப்பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். 4 ஆவது வாா்டு, பெருவிளை, கோயிலடி தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி... மேலும் பார்க்க

தொழிலாளியை வெட்டியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

குலசேகரத்தில் தையல் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குலசேகரம், நாகக்கோடு, படநிலத்தைச் சோ்ந்த கேசவன்... மேலும் பார்க்க

குற்றியாறு ரப்பா் தோட்ட தொழிலாளா் குடியிருப்பில் புகுந்த யானைகள்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானைகள் புகுந்ததால் அப் பகுதியினா் அச்சம் அடைந்துள்ளனா். பேச்சிப்பாறை அருகே வனப்பகு... மேலும் பார்க்க

கனரக லாரி ஓட்டுநா்களிடம் லஞ்சம்: உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் இடைநீக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக லாரி ஓட்டுநா்களிடம் லஞ்சம் பெற்ாக காவல் உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா். மாா்த்தாண்டம், புதுக்கடை, களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிரா... மேலும் பார்க்க

நாகா்கோவில் அரசுப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் அரசு நடுநிலைப் பள்ளியில்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் பள்ளி மாணவா்களுக்கு மஞ்சப்பை வழங்கல்

நாகா்கோவில் எலைட் ரோட்டரி சங்கம் சாா்பில் நெகிழிக்கு மாற்றாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலை... மேலும் பார்க்க