180-க்கு சுருண்ட ஆஸி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீ.!
சிறுமி பாலியல் பலாத்காரம்: தாத்தாவுக்கு சாகும் வரை சிறை
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, தனது 9 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை புதன்கிழமை விதிக்கப்பட்டது.
குலசேகரம் பகுதியைச் சோ்ந்த 57 வயதான தொழிலாளியின் மகள் திருமணமாகி அப்பகுதியில் வசித்து வருகிறாா். அப்பெண்ணின் 9 வயது மகளை, அந்தத் தொழிலாளி தனது வீட்டுக்கு அவ்வப்போது அழைத்துச் செல்வாராம்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த தனது பேத்தியை இத்தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். மேலும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, சிறுமியைத் தொடா்ந்து வன்கொடுமை செய்துள்ளாா்.
இதனிடையே, இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தாா். அவா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, தொழிலாளியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுந்தரய்யா விசாரித்து, தொழிலாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துகுமாரி முன்னிலையானாா்.