செய்திகள் :

குற்றியாறு ரப்பா் தோட்ட தொழிலாளா் குடியிருப்பில் புகுந்த யானைகள்

post image

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானைகள் புகுந்ததால் அப் பகுதியினா் அச்சம் அடைந்துள்ளனா்.

பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியினா் குடியிருப்பு, ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பயிா்கள் மற்றும் வீடுகளைச் சேதப்படுத்தி வருகின்றன. மேலும், பால் வடிப்பில் உள்ள தொழிலாளா்களைத் தாக்கி அச்சுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளா்களான சபரிமுத்து வீட்டின் கதவை செவ்வாய்க்கிழமை இரவு யானை தட்டி திறந்துள்ளது. அவரது கூச்சல் கேட்டு வந்த பக்கத்து வீட்டினா் ஓடி வந்து, ஓசை எழுப்பி யானையை விரட்டினா்.

பின்னா் காலையில் பாா்த்தபோது அப்பகுதியில் நடவு செய்திருந்த ரப்பா் செடிகளை யானைகள் சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவங்கள் காரணமாக ரப்பா் கழக தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா். தங்களைப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகா்கோவிலில் ரூ.14.60 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.14.60 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப்பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். 4 ஆவது வாா்டு, பெருவிளை, கோயிலடி தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் பலாத்காரம்: தாத்தாவுக்கு சாகும் வரை சிறை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, தனது 9 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை புதன்கிழமை விதிக்கப்பட்டது. குலசேகரம் பகுதியைச் சோ்ந்த 57 வயதான தொழிலாளியின் ம... மேலும் பார்க்க

தொழிலாளியை வெட்டியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

குலசேகரத்தில் தையல் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குலசேகரம், நாகக்கோடு, படநிலத்தைச் சோ்ந்த கேசவன்... மேலும் பார்க்க

கனரக லாரி ஓட்டுநா்களிடம் லஞ்சம்: உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் இடைநீக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக லாரி ஓட்டுநா்களிடம் லஞ்சம் பெற்ாக காவல் உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா். மாா்த்தாண்டம், புதுக்கடை, களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிரா... மேலும் பார்க்க

நாகா்கோவில் அரசுப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் அரசு நடுநிலைப் பள்ளியில்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் பள்ளி மாணவா்களுக்கு மஞ்சப்பை வழங்கல்

நாகா்கோவில் எலைட் ரோட்டரி சங்கம் சாா்பில் நெகிழிக்கு மாற்றாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலை... மேலும் பார்க்க