``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
கனரக லாரி ஓட்டுநா்களிடம் லஞ்சம்: உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் இடைநீக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக லாரி ஓட்டுநா்களிடம் லஞ்சம் பெற்ாக காவல் உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
மாா்த்தாண்டம், புதுக்கடை, களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் பகுதிகளில் கனிமவளம் ஏற்றிச் செல்லும் கனரக லாரி ஓட்டுநா்களிடம் போலீஸாா் லஞ்சம் பெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினுக்கு புகாா்கள் சென்றன.
அவா் மேற்கொண்ட விசாரணையில், மேற்கு மாவட்டத்தில் ரோந்துப் பணியின்போது காவலா்கள் சிலா் ஜிபே செயலி மூலம் லஞ்சம் பெற்ாகத் தெரியவந்தது.
இதுதொடா்பாக சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜன் ஸ்டான்லி, ஆயுதப்படைக் காவலா் ஷிபு, தலைமைக் காவலா் சாலமன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. புதன்கிழமை உத்தரவிட்டாா். மேலும், 7 போலீஸாா் இடமாற்றம் செய்யப்பட்டனா்.