செய்திகள் :

கருப்பை சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி? 5 மருத்துவர்களுக்குத் தொடர்பு!

post image

கருப்பை அகற்றும் அறுவைசிகிச்சையின்போது வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட பஞ்சினால், தொற்றுப் பரவி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண் பலியான சம்பவத்தில், ஐந்து மருத்துவர்களுக்குத் தொடர்பிருப்பதாக மூத்த மருத்துவ அதிகாரி குற்றம்சாட்டியிருக்கிறார்.

பிலிப்பிட் மூத்த மருத்துவ அதிகாரி அளித்த அறிக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் என ஐந்து பேர் இதற்குக் காரணம் என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவமனையில், அரசு மருத்துவமனை மருத்துவரால், கருப்பை அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகும் அவருக்கு வயிற்று வலி குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.

தொடர் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் பஞ்சு இருந்ததும் அதனால் சீழ் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை அகற்ற டிசம்பர் மாதம் இரண்டு அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனால், இரண்டாவது அறுவைசிகிச்சையின்போது கீலாவதி மரணமடைந்தார்.

அறுவைசிகிச்சை செய்த போது மருத்துவர்கள் கவனக்குறைவாக, பஞ்சை மறந்து அவரது வயிற்றிலேயே வைத்துத் தைத்ததே இறப்புக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை

ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌ... மேலும் பார்க்க

இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?

எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் இருந்ததால், டெஸ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படும்!

ஹைதராபாத்: தேர்தலை முன்னிட்டு மதுபானக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என்று சைபராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை தெலங்கானா மாநில சட்... மேலும் பார்க்க

கேரளம்: சுங்கத்துறை குடியிருப்பில் ஒரே வீட்டில் மூன்று சடலங்கள்!

கேரள மாநிலம் எர்ணாகும் மாவட்டத்தில் மத்திய சுங்கத் துறை குடியிருப்பில், ஒரு வீட்டிலிருந்து மூன்று உடல்கள் கைப்பற்றப்பட்டு உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க