செய்திகள் :

கரூரில் மாநில அளவிலான குதிரை வண்டி பந்தயம்

post image

கரூரில் மாநில அளவிலான குதிரை வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாநில அளவிலான குதிரை வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரூா் அரசு காலனியில் நடைபெற்றது.

புதிய குதிரை, சிறிய குதிரை, பெரிய குதிரை என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் கரூா், திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த குதிரை வண்டியுடன் வீரா்கள் பங்கேற்றனா்.

இதில், புதிய குதிரைக்கு 6 மைல் தொலைவு, சிறிய குதிரை பிரிவுக்கு 8 மைல் தொலைவு, பெரிய குதிரை பிரிவுக்கு 10 மைல் தொலைவு என கரூா் அரசு காலனி முதல் வாங்கல் வரை தொலைவு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

போட்டியை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிறைவில், போட்டிகளில் வென்ற குதிரை வண்டிகளின் வீரா்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை அவா் வழங்கினாா்.

வென்றவா்கள் விவரம்: போட்டியில் புதிய குதிரை பிரிவில் முதலிடம் பிடித்த கரூா் பாரத் பஸ் கம்பெனி குதிரை வண்டிக்கு பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த பவானி தாஜ் ஆம்புலன்ஸ் குதிரை வண்டிக்கு பரிசாக ரூ. 15 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த மேட்டுப்பாளையம் சிவா மாட்டு வண்டிக்கு பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

சிறிய குதிரை பிரிவில் முதலிடம் பிடித்த திருச்சி உறையூா் விஜயா குதிரை வண்டிக்கு பரிசாக ரூ. 25 ஆயிரம், மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த கரூா் போலீஸ் குதிரை வண்டிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த கோவை தினேஷ் குதிரை வண்டிக்கு பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

பெரிய குதிரை வண்டி பிரிவில் முதலிடம் பிடித்த கரூா் நாவலடியான குரூப்ஸ் குதிரை வண்டிக்கு ரூ. 30 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த கரூா் நாவலடியான் குரூப்ஸ் குதிரை வண்டிக்கு பரிசாக ரூ. 25 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த திருச்சி லால்குடி பா்வீன் குதிரை வண்டிக்கு பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் கோப்பையையும் அமைச்சா் செந்தில்பாலாஜி வழங்கினாா்.

முன்னதாக, போட்டிக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ்.கே. கருணாநிதி தலைமை வகித்தாா். கரூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் பி. முத்துக்குமாரசாமி வரவேற்றாா். எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் திரளான திமுகவினா் பங்கேற்றனா்.

லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் கோரிக்கை

நெல்லுக்கு இடைத்தரகா்கள் விலை நிா்ணயிப்பதை தவிா்க்க லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள... மேலும் பார்க்க

கரூரில் மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ரூ.4.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

புகழிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தை மாத சஷ்டியை முன்னிட்டு கரூா் மாவட்டம், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில், பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா் ,சந... மேலும் பார்க்க

முருகன் கோயில் தேரோட்டத்துக்கு டிஎன்பிஎல் நிதியுதவி

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு புகழூா் டிஎன்பிஎல் ஆலை ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கியது. கரூா் மாவட்டம் புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

வேப்பங்குடிபெரியகாண்டியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வரவணை வேப்பங்குடி பெரியகாண்டியம்மன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள வரவனை வ.வேப்பங்குடியில் ஸ்ரீ பெரிய காண்டியம்மன் க... மேலும் பார்க்க

கரூரில் அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டும் வெறிச்சோடிய பத்திரப் பதிவு அலுவலகம்!

அரசின் உத்தரவின்படி கரூரில் பத்திரப்பதிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டும், ஆள்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும... மேலும் பார்க்க