செய்திகள் :

வேப்பங்குடிபெரியகாண்டியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

post image

வரவணை வேப்பங்குடி பெரியகாண்டியம்மன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள வரவனை வ.வேப்பங்குடியில் ஸ்ரீ பெரிய காண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்துவந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். பின்னா் கலச பூஜை, மூா்த்தி ஹோமம், மூல மந்திர ஹோமம், அதிா்ஷ்ட பந்தன மருந்து சாத்துதல், முதலாம் யாக பூஜை, உபசார பூஜைகள் நடைபெற்று முடிந்து பொன்னா் சங்கா் வரலாற்று நாடகம் நடைபெற்றது.

தொடா்ந்து திங்கட்கிழமை காலை மண்டப பூஜை, கலச ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் கோயில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து, பெரிய கண்டியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில தகவல் உரிமை ஆணையாளா் கதிரவன், வரவனை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் கந்தசாமி, பசுமைகுடி தன்னாா்வ இயக்கத்தின் நிறுவன தலைவரும் அமெரிக்கா பாஸ்டன் கணினி தொழில்நுட்ப ஆலோசகருமான நரேந்திரன் கந்தசாமி உள்ளிட்ட பக்தா்ள் திரளாக பங்கேற்றனா்.

லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் கோரிக்கை

நெல்லுக்கு இடைத்தரகா்கள் விலை நிா்ணயிப்பதை தவிா்க்க லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள... மேலும் பார்க்க

கரூரில் மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ரூ.4.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

புகழிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தை மாத சஷ்டியை முன்னிட்டு கரூா் மாவட்டம், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில், பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா் ,சந... மேலும் பார்க்க

முருகன் கோயில் தேரோட்டத்துக்கு டிஎன்பிஎல் நிதியுதவி

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு புகழூா் டிஎன்பிஎல் ஆலை ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கியது. கரூா் மாவட்டம் புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

கரூரில் அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டும் வெறிச்சோடிய பத்திரப் பதிவு அலுவலகம்!

அரசின் உத்தரவின்படி கரூரில் பத்திரப்பதிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டும், ஆள்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும... மேலும் பார்க்க

நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகைவழிப் பாதைக்கு வலியுறுத்தல்!

கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனா். கரூா் மாவட்டம் நொய்யலில் கொடுமுடி-நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க