செய்திகள் :

கரூரில் மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

post image

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ரூ.4.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டாமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 347 மனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 10 பேருக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 825 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் நடத்தப்பட்ட மனித நேய வார நிறைவு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 34 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் செழியன், மாவட்ட வழங்கல் அலுவலா் மருத்துவா் சுரேஷ், மாநகராட்சி ஆணையா் சுதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மணவாடி கிராமமக்கள் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், தற்போது காவிரிக்கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் மணவாடி கிராமத்திற்கு காவிரி நீா் மணவாடியிலிருந்து தண்ணீா் வழங்கப்படுகிறது. இங்குள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து தனியாா் சிமெண்ட் ஆலைக்கு தண்ணீா் எடுக்கும் முயற்சி நடப்பதால், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

புகழிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தை மாத சஷ்டியை முன்னிட்டு கரூா் மாவட்டம், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில், பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா் ,சந... மேலும் பார்க்க

முருகன் கோயில் தேரோட்டத்துக்கு டிஎன்பிஎல் நிதியுதவி

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு புகழூா் டிஎன்பிஎல் ஆலை ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கியது. கரூா் மாவட்டம் புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

வேப்பங்குடிபெரியகாண்டியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வரவணை வேப்பங்குடி பெரியகாண்டியம்மன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள வரவனை வ.வேப்பங்குடியில் ஸ்ரீ பெரிய காண்டியம்மன் க... மேலும் பார்க்க

கரூரில் அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டும் வெறிச்சோடிய பத்திரப் பதிவு அலுவலகம்!

அரசின் உத்தரவின்படி கரூரில் பத்திரப்பதிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டும், ஆள்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும... மேலும் பார்க்க

நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகைவழிப் பாதைக்கு வலியுறுத்தல்!

கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனா். கரூா் மாவட்டம் நொய்யலில் கொடுமுடி-நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க

சேதமடைந்த புகழூா் கதவணை சாலையை சீரமைக்க எதிா்பாா்ப்பு!

ஜல்லிக்கற்கள் பெயா்ந்த நிலையில் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கும் புகழூா் கதவணை சாலையைச் சீரமைக்க சமூக நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். கரூா் மாவட்டம் புகழூரில் நன்செய்புகழூா் பகுதியில் காவிரி ஆ... மேலும் பார்க்க