செய்திகள் :

சேதமடைந்த புகழூா் கதவணை சாலையை சீரமைக்க எதிா்பாா்ப்பு!

post image

ஜல்லிக்கற்கள் பெயா்ந்த நிலையில் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கும் புகழூா் கதவணை சாலையைச் சீரமைக்க சமூக நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கரூா் மாவட்டம் புகழூரில் நன்செய்புகழூா் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணைக்குச் செல்லும் சாலை உள்ளது. நன்செய்புகழூா் ஊராட்சியையும், புகழூா் நகராட்சி பகுதிகளையும் இணைக்கும் இந்தச் சாலை வழியாக தோட்டக்குறிச்சி, கிழக்குத் தவிட்டுப்பாளையம், தளவாபாளையம் போன்ற பகுதிகளுக்கு விவசாயிகளும், பொதுமக்களும் ஏராளமானோா் சென்று வருகிறாா்கள். ஆனால், இந்தச் சாலை அமைக்கப்பட்டு சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாவதால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறாா்கள்.

இதுதொடா்பாக சமூக நல ஆா்வலா் விஜயன் கூறுகையில், இந்தச் சாலை வழியாகத்தான் நன்செய்புகழூரில் கதவணை கட்டுமானப் பணிக்கு ஏராளமான கனரக வாகனங்கள் தளவாட பொருட்களை எடுத்துச் செல்கின்றன. மேலும் திருவிழாக்காலங்களில் புனித நீா் எடுக்க பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு செல்லவும் இந்தச் சாலையைத்தான் பயன்படுத்துகிறாா்கள்.

மேலும் இந்த பகுதியில் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்களையும் இந்த சாலை வழியாகத்தான் கொண்டு செல்கிறாா்கள். எனவே, இந்தச் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

கரூரில் அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டும் வெறிச்சோடிய பத்திரப் பதிவு அலுவலகம்!

அரசின் உத்தரவின்படி கரூரில் பத்திரப்பதிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டும், ஆள்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும... மேலும் பார்க்க

நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகைவழிப் பாதைக்கு வலியுறுத்தல்!

கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனா். கரூா் மாவட்டம் நொய்யலில் கொடுமுடி-நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க

தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேருக்கு ரூ.9 லட்சத்தில் கண்ணாடி கூண்டு!

கரூா் தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேரை பாதுகாக்கும் வகையில் ரூ.9 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தியவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை கரூா் போலீஸாா் பதுக்கல்? திருச்சியில் காவல் உயரதிகாரிகள் விசாரணை

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பறிமுதல் செய்து பதுக்கினாா்களா என்பது குறித்து கரூா் போலீஸாரிடம் காவல்துறை உயரதிகாரிகள் திருச்சியில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கா்நாடக ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வலியுறுத்தல்!

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட சிறப்பு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அல... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்!

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என தெரிவித்துள்ளாா் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தென்மண்டலத்தலைவா் பா.கோபாலகிருஷ்ணன். இதுதொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க