இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகைவழிப் பாதைக்கு வலியுறுத்தல்!
கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனா்.
கரூா் மாவட்டம் நொய்யலில் கொடுமுடி-நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக திருச்சியில் இருந்து கரூா் வழியாக ஈரோடு, திருப்பூா், கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு போன்ற இடங்களுக்கும், சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கும் நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் நொய்யல் ரயில்வே கேட்டை கடக்கும்போது கேட் மூடப்படுகிறது. சில நேரங்களில் சிமெண்ட், நிலக்கரி போன்றவற்றை ஏற்றி வரும் சரக்கு ரயில்களும் கேட்டை நீண்ட நேரம் கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகளும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் அவா்கள் அவதியுறுகிறாா்கள். சில நேரங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசர வாகனங்களும் ரயில்வே கேட் மூடப்படும்போது கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே நொய்யல் ரயில்வே கேட் அருகே குகை வழிப்பாதை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.