செய்திகள் :

கரூர்: 'கனடாவில் உடனே வேலை' - விவசாயியிடம் ரூ. 5.70 லட்சம் ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

post image

கரூர் மாவட்டம், புகளூர் நடுநானப்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியன்(வயது 60). இவரது மகன் மனோஜ் பிரபாகர். இவர், பி.எஸ்.சி வேளாண் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டிலிருந்து வந்தார்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியனின் நண்பர் சென்னை மயிலாப்பூர் லாஸ் அவென்யூ முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த ராஜ் அருண் (வயது: 70). இவர் சினிமா சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அவரிடம் பாலசுப்ரமணியன் தனது மகன் படித்துவிட்டு வீட்டில் இருப்பதாகவும், அவருக்கு ஒரு வேலை வாங்கித் தருமாறும் கேட்டுள்ளார்.

accused

அப்போது, தனது மகன் கனடாவில் வசித்து வருவதாகவும், உங்களது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பிய பாலசுப்பிரமணியன், ராஜ் அருண் கேட்டுக்கொண்டபடி அவரிடம் 5.70 வரை லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

அதை வாங்கிக் கொண்ட ராஜ் அருண், மனோஜ் பிரபாகருக்கு வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். பலமுறை பாலசுப்பிரமணியன் ராஜ் அருணிடம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், ராஜ் அருண் வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

இதனால் அதிர்ச்சடைந்த பாலசுப்ரமணியன் பலமுறை ராஜ் அருணிடம் பணம் கேட்டும் கொடுக்காததால் பாலசுப்பிரமணியன் நேரடியாக சென்னைக்குச் சென்று ராஜ் அருணை நேரில் சந்தித்து பணத்தைக் கேட்டபோது, ராஜ் அருண் கோபமடைந்து பாலசுப்ரமணியனைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து, பாலசுப்ரமணியன் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் இரு தரப்பினரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து இருந்தார்.

ஆனால், ராஜ் அருண் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வர மறுத்துவிட்டார். அதன் அடிப்படையில், ராஜ் அருண் மீது ரூ5.70 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

பண மோசடி
பண மோசடி

பின்னர், அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் குறிப்பிட்ட இடத்தில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீஸார் ராஜ் அருணைக் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் ராஜ் அருணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பிறகு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அங்குள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை கத்தியால் குத்திய பாலிவுட் இயக்குநர்? - மும்பை போலீஸ் விசாரணை

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மணீஷ் குப்தா. இவரிடம் மொகமத் லஷ்கர் என்பவர் டிரைவராக இருந்தார். மூன்று ஆண்டுகள் டிரைவராக பணியாற்றி வந்த மொகமத்திற்கு இயக்குனர் மணீஷ் சரியான நேர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு; கண்டித்த கணவர் - கோபத்தில் மகளை கொன்று தாயும் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா (24). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத... மேலும் பார்க்க

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க