செய்திகள் :

கரூர் பலி: இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் - திருமாவளவன்

post image

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு தொல். திருமாவளவன் அளித்த பேட்டி:

தவெக பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. யார் பொறுப்பு என்பதைவிட, தற்போது ஆபத்தான நிலையில் உள்ளவர்களைக் காப்பதே முக்கியம்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சமும் அரசு வழங்க வேண்டும்.

சம்பவ இடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று பார்வையிட்டது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலை அளித்திருக்கும் என்று தெரிவித்தார்.

கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: கரூரில் முதல்வர் ஸ்டாலின்! பலியானோருக்கு அஞ்சலி

Thirumavalavan, has asked the Tamil Nadu government to provide Rs. 50 lakh to the families of those killed in the Karur stampede.

கரூர் விஜய் பிரசாரத்தில் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த 2 பேர் பலி!

வெள்ளக்கோவில்: கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி வெள்ளக்கோவிலைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமா... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மத்திய அரசு நிவாரணம்!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 39 பேர் பலியான நிலையில், பிரதமர்... மேலும் பார்க்க

தவெகவின் மோசமான அரசியலை ஆதரிக்கும் அதிமுக: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தவெகவின் மோசமான அரசியலை அதிமுக ஆதரிப்பதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்... மேலும் பார்க்க

கரூர் துயரம்- தமிழக அரசிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்

கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட க... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை

கரூர் நெரிசலில் சிக்கி பலியானோரின் உடல்களைக் காண முற்பட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, அப்பகுதியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கரூரில் தவெக பிராசாரக் கூட்டத்தில் சிக்கி ப... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: நீதிமன்றம் விசாரிக்க தவெக கோரிக்கை?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க தவெக முறையிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தாமாக முன்வந்து நீ... மேலும் பார்க்க