செய்திகள் :

'கரூர் வழக்கில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதா? தவெகவை திமுக நசுக்க பார்க்கிறது' - அண்ணாமலை

post image

பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரூர் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் நீதிபதியை விமர்சிப்பது துரதிஷ்டவசமானது. நீதிபதி குறித்து நாங்கள் எப்போதும் குறை சொல்ல மாட்டோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழகத்தில் மட்டும்தான் மத்திய அரசை எதிரியாக கருதுகிறார்கள். ஆரோக்கியமாக எந்த விஷயத்தையும் பேசாமல் அனைத்தையும் மத்திய அரசு மீது விமர்சிக்கின்றனர். ஒரு ஆளுநரை முதல்வர் தொடர்ந்து சீண்டி கொண்டிருப்பது சரியல்ல.

கரூர் வழக்கில் தவெக தலைவர் விஜய்யை முதல் குற்றவாளியாக இணைத்தால் வழக்கு நிற்காது. ஹைதராபாத் அல்லு அர்ஜுனா வழக்கில் அப்படித்தான் நடந்தது. தவெக மீது சில தவறுகள் இருக்கின்றன. அதற்காக விஜய்யை குற்றவாளியாக மாற்ற வேண்டும் என நினைத்தால் அது முடியாது.

அண்ணாமலை - விஜய்

அதற்கு வாய்ப்பே இல்லை. பாஜகவுக்கு தவெக மற்றும் விஜய்யை காப்பாற்ற வேண்டிய கடமை இல்லை. தவெகவை ஆளுங்கட்சி நசுக்க பார்க்கிறது. அதற்கு கருத்து சொல்கிறோம். அதற்காக அடைக்கலம் கொடுக்கிறோம் என்பது அபத்தமானது.

கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதை பொது இடங்களில் பேச முடியாது. கட்சியில் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். யாரும் தனிப்பட்ட முறையில் எதுவும் செய்ய மாட்டோம். 2026 தேர்தலில் வெற்றி வரவேண்டும் என்பதற்காக பணியாற்றி கொண்டிருக்கிறோம்.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

நயினார் நாகேந்திரன் எப்போதும், யாருக்கும் எதிராக பேசவில்லை. எங்களுக்கு முக்கிய எதிரி திமுக. அதை எதிர்த்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். அரசியலில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கிறது, அதை சரி செய்து கொண்டு செல்வோம்.” என்றார்.

கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன், கரூர் த.வெ.க பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது செய்தி... மேலும் பார்க்க

Kantara: "தர்மத்தையும் துளு நாட்டின் கலாச்சாரத்தையும் சேர்த்துள்ளார் ரிஷப் ஷெட்டி" - அண்ணாமலை ரிவ்யூ

இந்தியா முழுவதும் ஹிட் ஆகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இன்று சமூக வலைதளத்தில் முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலகினரைக் கடந்து பல துறைகளைச் சேர்ந்தவர்கள் படக்... மேலும் பார்க்க

நீதிபதி கவாய் மீது தாக்குதல்: "இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது" - ஸ்டாலின் கண்டனம்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறு... மேலும் பார்க்க

``இது தவறோ, அலட்சியமோ அல்ல; பெரும் அரசியல் குற்றச்செயல்" -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 22.7 லட்சம் மக்களின் பெயர்களைத் திட்டமிட்டு நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2020 தேர்தலின்போது காங்கிரஸ் நெர... மேலும் பார்க்க

``சினிமா கவர்ச்சி போல வாக்குறுதி; ஏமாற்றுவது, திமுகவுக்கு கைவந்த கலை'' - செல்லூர் ராஜூ காட்டம்

"என் தந்தை அறிவுஜீவி, முதல்வர் பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார் என இப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது பேசினார், ஆனால் ஒன்றுமே செய்யவில்லை." என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ... மேலும் பார்க்க

500 ஆண்டுகளாக நடக்கும் துர்கா பூஜை: கலவரக் காடாக மாறிய ஒடிசா நகரம்; இணைய முடக்கம் - என்ன நடந்தது?

துர்கா பூஜை ஊர்வலம்24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இருந்து வந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதனையடுத்து மோகன் சரண் மாஜி தலைமையில், ஒடிச... மேலும் பார்க்க