செய்திகள் :

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

post image

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.

சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஒரே நாளில் நேர்ந்த அதிகபட்ச பலி இதுவாகும்.

நாட்டில் கடந்த நில நாள்களாக கரோனா திரிபு வகையான எல்.எஃப். 7, ஜே.என். 1 மற்றும் என்.பி. 1.8.1. ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் புதிய வகை தொற்றுகள் ஆபத்தானவை அல்ல என்றாலும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். கேரளத்தில் 5 பேர், தில்லியில் 3 பேர், மகாராஷ்டிரத்தில் 2 பேர் கரோனாவுக்கு இன்று (ஜூன் 15) உயிரிழந்தனர். கடந்த ஜனவரி முதல் இதுவரை கரோனாவுக்கு 97 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக கேரளத்தில் 2,007 பேரும், குஜராத்தில் 1,441 பேரும், மேற்கு வங்கத்தில் 747 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கேரளத்தில் 367 பேரும், குஜராத்தில் 177 பேரும், தில்லியில் 161 பேரும், மகாராஷ்டிரத்தில் 86 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 27 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | புணேவில் ஆற்றுப்பாலம் இடிந்து விபத்து: 6 பேர் பலி, பலர் மாயம்

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: புதிய அலையில் மருத்துவர்கள் கண்டறிந்த அதிர்ச்சித் தகவல்!

கரோனா.. சில ஆண்டுகளுக்கு முன்பு உலகையே உலுக்கிவிட்டு, மீண்டும் கடந்த மே மாதம் முதல் உலக நாடுகளில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.தற்போது உலகம் முழுவதும் அதாவது 2025ஆம் ஆண்டு மத்தியில் பல்வேறு நாடுகளில்... மேலும் பார்க்க

மும்பையில் விமான சேவை பாதிப்பு: இண்டிகோ முக்கிய அறிவிப்பு

மும்பையில் கனமழை பெய்து வருவதால் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மும்பையில் இன்று(திங்கள்கிழமை) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான ப... மேலும் பார்க்க