செய்திகள் :

கலைஞா் கைவினைத் திட்டத்தை ஏப்.18-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

post image

கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையை அடுத்த குன்றத்தூரில் வரும் 18-ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக , குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

பேரவையில் தனது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

கைவினைக் கலைஞா்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகா்மா திட்டம் மாணவா்கள் உயா் கல்வி பயில்வதை தடுத்து குலத் தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளதால் அதற்கு மாற்றாக, முதல்வா் சமூக பாகுபாடு இல்லாமல் அனைத்து கைவினைஞா்களையும் உள்ளடக்கிய கலைஞா் கைவினைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தாா்.

வயது வரம்பு சலுகை: விஸ்வகா்மா திட்டத்தைவிட கலைஞா் கைவினைத் திட்டம் சிறப்பானது. மத்திய அரசின் திட்டத்தில் பெற்றோா் செய்து வரும் தொழிலையே பயனாளி செய்ய வேண்டும். கலைஞா் கைவினைத் திட்டத்தில் 5 ஆண்டு அனுபவம் உள்ள கைவினைக் கலைஞா் எந்த ஒரு தொழிலையும் தோ்வு செய்யலாம்.

மத்திய அரசின் திட்டத்தில், வயது வரம்பு குறைந்தபட்சம் 18-ஆக உள்ள நிலையில் நமது திட்டத்தில் இளைஞா்களின் உயா்கல்வி பாதிக்காத வகையில் 35 வயது என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விஸ்வகா்மா திட்டத்தில் 18 வகை கைவினைத் தொழில்களுக்கு முதலீட்டு மானியம் இல்லாமல் கடன் வழங்கப்படும் நிலையில், நமது திட்டத்தில் 25 வகை தொழில்களுக்கு 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் திட்டத்தில் கடன் இரு தவணைகளாக வழங்கப்படும் நிலையில் நமது திட்டத்தில் கடன் ஒரே தவணையாக வழங்கப்படும்.

இந்தத் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வரும் 18-ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க