செய்திகள் :

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

post image

சென்னை: தமிழகத்தில் கலை, அறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.

பள்ளியிலிருந்து விடைபெற்று, கல்லூரிக்குள் மிகுந்த உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் வந்துள்ளனர். பல்வேறு கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதலாமாண்டு மாணவர்களுக்கு பூக்களை பரிசளித்து மூத்த மாணவ, மாணவிகள் வரவேற்றனர். முன்னதாக, பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் கடந்த வாரம் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத் தோ்வுகள் நடைபெற்றது. பின்னா் ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. அதன் பின்னா் திங்கள்கிழமை (ஜூன் 16) கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் 183 அரசுக் கல்லூரிகள், 161 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 1,299 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் என 1,643 கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சமீபத்தில் முதலாமாண்டு இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் சோ்க்கைகள் நடைபெற்று முடிந்தன.

இவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தொடங்க கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்த நிலையில், பெரும்பாலான கல்லூரிகள் இன்று தொடங்கியிருக்கின்றன. சில தனியாா் மற்றும் அரசு உதவிபெரும் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகளும் கடந்த வாரமே தொடங்கிவிட்டன.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்க... மேலும் பார்க்க

அரசியல், கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம்: தவெக

அரசியல் எதிரி, கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம் என தமிழக வெற்றிக்கழக மாநில கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை ஒட்... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 30) ஒருசி... மேலும் பார்க்க

நீதியை நிலைநாட்ட வேண்டும்: காவல்துறையினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வரும் மக்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டு அவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அ... மேலும் பார்க்க

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம்: விரைவில் அமல்!

சென்னயில் 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.மத்திய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்... மேலும் பார்க்க

காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலுக்கு விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க