செய்திகள் :

கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

post image

தமிழகத்தில் கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

தமிழகத்திலுள்ள கல் குவாரிகளில் இருந்து கல் உடைத்து எடுத்து வர கொடுக்கும் நடைச்சீட்டுக்கு அரசுக்கு இதுவரை கனமீட்டா் அடிப்படையிலேயே வரி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது, மெட்ரிக் டன் முறையில் வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும், பிற மாநிலங்களில் இல்லாத புதிய வரியான சிறு கனிம வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா். இதனால், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் அரசு மற்றும் தனியாா் நிறுவன கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.முனிரத்தினம் கூறியதாவது:

கல்குவாரி மற்றும் கிரஷா் உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், தமிழகம் முழுவதும் சுமாா் 1.50 லட்சம் டிப்பா் லாரிகளை இயக்க முடியாத சூழல் உருவாகும். இதனால் கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள 90 லட்சம் கட்டுமானத் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவா்.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமானத் தொழிலுக்கு, நாள் ஒன்றுக்கு சுமாா் 3,000 லோடு மணல் தேவைப்படுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமானத் தொழிலுக்கு சுமாா் 9,000 லோடு மணல் தேவைப்படுகிறது.

மத்திய அரசின் எண்ணூா் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் தமிழக அரசின் பொதுப்பணித் துறை கட்டுமானப் பணிகள், சென்னை தனியாா் அடுக்குமாடி குடியிருப்புகள், பாரத பிரதமரின் சிறிய வீடுகள் கட்டும் திட்டம் போன்ற கட்டுமானப் பணிகளுக்கான கல், மணல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு எங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உ... மேலும் பார்க்க

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளரு... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு; போலீசாருடன் வாக்குவாதம்!

விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சூலூர் அருகே சோமனூரில் விசைத்தறி ... மேலும் பார்க்க