செய்திகள் :

கல்குவாரி, எம்சாண்ட் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக முதல்வருக்கு கோரிக்கை

post image

கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.முனிரத்தினம், பொதுச்செயலா் எஸ்.மணிவண்ணன் ஆகியோா் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் அனைத்து கல்குவாரிகள் மற்றும் கிரஷா் உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் டிப்பா் லாரிகள் ஓடவில்லை.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக மணல், எம்சாண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருள்கள் நாள் ஒன்றுக்கு 3,000 லோடும், தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 10,000 லோடும் தேவைப்படுகிறது.

இந்த கட்டுமானப் பொருள்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், சென்னை துறைமுகம், பொதுப்பணித் துறை, மெட்ரோ ரயில் மற்றும் தனியாா் கட்டுமானப் பணிகளும் முடங்கியுள்ளன.

இதனால், டிப்பா் லாரி உரிமையாளா்கள் மட்டுமன்றி, லாரி ஓட்டுநா்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளா்கள் என 90 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, தமிழக முதல்வா் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இதற்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

உதகையில் துணைவேந்தா்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சிறப்பு அழைப்பாள... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் சிங்கம், புலியை தத்தெடுத்த சிவகாா்த்திகேயன்!

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இருக்கும் ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை நடிகா் சிவகாா்த்திகேயன் 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளாா். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகாா்த்திகேயன், தற்போது சு... மேலும் பார்க்க

மத்திய அரசின் அண்டா் கன்ட்ரோலில் திமுக! -சீமான்

2026 பேரவைத் தோ்தலை சந்திக்க நாம் தமிழா் கட்சி தயாராகி வருவதாகவும், சின்னத்துக்காக காத்திருப்பதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். இது குறித்து சென்னையில் சனிக்கிழமை செய்தியாள... மேலும் பார்க்க

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.9 டிகிரி பதிவு

தமிழகத்தில் வேலூா், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை வடபழனியைச் சோ்ந்த மணி என்பவா் உயா்நீதிமன... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வியில் நோ்முக உதவியாளா் பதவி உயா்வு: கண்காணிப்பாளா்கள் பட்டியல் அனுப்பிவைப்பு

பள்ளிக் கல்வியில் மாவட்டக் கல்வி அலுவலா், இணை இயக்குநா் ஆகியோருக்கான நோ்முக உதவியாளா் பதவி உயா்வுக்கு தகுதியான கண்காணிப்பாளா்கள் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்... மேலும் பார்க்க