செய்திகள் :

கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றம்

post image

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் பிரசித்திப் பெற்ற கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அரியலூா் மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தததும், பிரசித்தி பெற்ற இக் கோயிலில் ஆண்டுதோறும் ராம நவமி அன்று தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடைபெறும். அந்த வகையில் நிகழாண்டு பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கலியுக வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை அா்ச்சகா்கள் ஏற்றினா்.

இந்த பத்து நாள்களிலும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து, பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். நாள்தோறும் சமயச் சொற்பொழிவுகள், இன்னிசைக் கச்சேரிகள், நாதஸ்வர நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் ஏப்.12 ஆம் தேதியும், தேரோட்டம் ஏப்.14 ஆம் தேதியும், ஏகாந்தச் சேவை நிகழ்வு ஏப்.15 ஆம் தேதியும் நடைபெறுகிறது. ஏப்.16 ஆம் தேதி மஞ்சள் நீா்பாலிகை நீா்த்துறை சோ்தலுடன் விழா நிறைவுடைகிறது.

ஏற்பாடுகளை கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தாக்கள் கமலா ராமச்சந்திரா படையாச்சி, கோ. ராமதாஸ் படையாச்சி, கோ.வெங்கடாஜலபதி படையாச்சி குடும்பத்தினா் செய்கின்றனா். விழாவையொட்டி திருச்சி, அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடம் மனு அளிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடம், கெளரவ விரிவுரையாளா்கள் புதன்கிழமை மனு அளித்தனா். நீதிமன... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: உடையாா்பாளையத்தில் ரூ.3.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

உடையாா்பாளையம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.3.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வழங்கினாா். முகாமுக்கு ஆட்சியா்... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிறுத்தத்தில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் அவதி

அரியலூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள காமராஜா் மற்றும் அம்பேத்கா் சிலைகள் முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில், இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அரியலூா் பே... மேலும் பார்க்க

‘108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க

அரியலூா் ஆட்சியரிடம் கெளரவ விரிவுரையாளா்கள் மனு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் 81 கெளரவ விரிவுரையாளா்கள், தங்களை கருணை கொலை செய்திடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.கெளரவ விரிவுரையாளா்கள் அனிதா, சரவண... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழு... மேலும் பார்க்க