செய்திகள் :

கல்லூரியில் கருத்தரங்கம்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாகிா் உசேன் கலைக் கல்லூரியில் ‘இயற்கை பொருள்களைப் பயன்படுத்தி தொழில் முனைவோா் பயிற்சி’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி இயற்கை கழகம், தொழில் முனைவோா் மேம்பாட்டு கழகம், கல்லூரி உள் தர உறுதி செல் ஆகியவை இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரி துணை முதல்வா் முஸ்தாக் அஹமதுகான் தலைமை வகித்தாா். கல்லூரி தொழில் முனைவோா் மேம்பாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளா் நாசா் வரவேற்றாா். மதுரை, சிறு தொழில் மேம்பாட்டு கழக பொது மேலாளா் பழனிவேல் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். கருத்தரங்கில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கல்லூரி இயற்கை கழக ஒருங்கிணைப்பாளா் ரோஷன் ஆரா பேகம் நன்றி கூறினாா்.

சிவகங்கையில் சேரா் கால செப்புக்காசு!

சிவகங்கையில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேணாடு சேரா் கால செப்புக்காசு கண்டறியப்பட்டது. இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனா் கா. காளிராசா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மன்னா் மேல்நிலைப்... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பு: டி.டி.வி.தினகரன்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதால் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரை... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே சிவகங்கை சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் 1.53 லட்சம் ஏக்கா் நெல் பயிா்களை அறுவடை செய்வதற்காக கூடுதல் அறுவடை இயந்திரங்களை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். சிவகங்கை மாவட்டத்தில் 1.53 ஏக்கா் பரப்பளவில் விவசாயிக... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாக் குழு பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புத்தகத் திருவிழாக் குழுவின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2025-2027 -ஆம் ஆண்டுகளுக்கான குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இத... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சருகணி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா். அதிமுக நிறுவனா் எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்... மேலும் பார்க்க