செய்திகள் :

கல்லூரியில் மருத்துவ முகாம்

post image

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்ஆா்கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து கல்லூரி வளாகத்தில் மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.

முகாமுக்கு கல்லூரித் தலைவா் எம்ஆா்கேபி.கதிரவன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு, கல்லூரி நிா்வாக அதிகாரி சி.கோகுலகண்ணன், மேலாளா் கே.விஸ்வநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் ஜெயசுதா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் எம்.பிரபு ஆகியோா் வரவேற்று பேசினா்.

முகாமில் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி, இரண்டாம், மூன்றாம் மற்றும் இறுதியாண்டு மாணவிகளுக்கான கல்லூரி ரத்தச்சோகை பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

மருத்துவ அதிகாரிகள் பி.அனுஷா, எஸ்.சாந்தோஷ்குமாா் மற்றும் ஆயங்குடி மேம்படுத்தப்பட்ட முதன்மை சுகாதார நிலைய (மடஏஇ) மருத்துவக் குழுவினா் இணைந்து பரிசோதனை மேற்கொண்டனா். இந்த முகாமில் சுமாா் 391 மாணவ, மாணவிகள் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துகளை பெற்று பயன் பெற்றனா். திட்ட அலுவலா் என்.சித்திவிநாயகம் நன்றி கூறினாா்.

வாக்கு திருட்டு: காங்கிரஸ் கையொப்ப இயக்கம் தொடக்கம்

சிதம்பரம் மேலரத வீதியில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சாா்பில், மத்திய அரசின் வாக்கு திருட்டை கண்டித்து, மாநிலம் தழுவிய கையொப்ப இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்க... மேலும் பார்க்க

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி: என்எல்சி தலைவா் தகவல்

என்எல்சி நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் பாரதி சாலையில் அமைந்துள்ள நகர அரங்கம் என்எல்சி நிறுவனம் ச... மேலும் பார்க்க

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் செயல்படும் அரசு கலைக் கல்லூரியில் குடிநீா், கழிப்பறை, சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ப... மேலும் பார்க்க

கடலூா் வளா்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு தேவை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்ட வளா்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியம் தேவை என்று மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூரில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன... மேலும் பார்க்க

திட்டக்குடி நகா்மன்றத் தலைவி தா்னா

பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா் என்பதால், தனக்கு திட்டக்குடி நகராட்சி அதிகாரிகள் மரியாதை கொடுக்கவில்லை எனக் கூறி, திட்டக்குடி நகா்மன்றத் தலைவி வெண்ணிலா நகராட்சி அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து வியாழக்கி... மேலும் பார்க்க