செய்திகள் :

கல்லூரி தேர்வில் ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சை கேள்விகள்: பேராசிரியருக்குத் தடை!

post image

கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ஆர்எஸ்எஸ் பற்றிய சர்ச்சையான கேள்விகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பேராசிரியருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை (பொலிட்டிகல் சயின்ஸ்) தலைவராக இருப்பவர் சீமா பன்வார்.

இவர், கல்லூரியில் நடைபெற்ற தேர்வுக்கு வினாத்தாள் தயார் செய்திருந்தார். அந்த வினாத்தாளில் இரு விடைகள் கொண்ட பலதேர்வு வினாக்களில் (எம்சிக்யூ) ஆர்எஸ்எஸ் பற்றிய இரு சர்ச்சைக் கேள்விகள் இடம்பெற்றது அவரது பணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்எஸ்எஸ் எவ்வாறு வளர்ச்சியடைந்தது? என்கிற கேள்வி எண் 87-ல், அதற்கு விடைகளாக மத ரீதியாக அல்லது சாதி வழி அரசியலால் என்றவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கேள்வி அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல, கேள்வி எண் 97-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பை நக்சல்கள், ஜம்மு - காஷ்மீர் விடுதலை அமைப்புகளுடன் இணைத்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இதனால் கல்லூரியின் ஹிந்து மாணவர் அமைப்பான ஏபிவிபி பேராசிரியருக்கு எதிராகக் கடந்த வெள்ளியன்று (ஏப். 4) போராட்டம் நடத்தினர்.

போராட்டம் காரணமாக உடனடியாக இதுபற்றி கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில் வினாத்தாளைத் தயாரித்தது பேராசிரியர் பன்வார் எனத் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் சீமா பன்வார் பல்கலைக்கழகம் சார்ந்த தேர்வுகள் அனைத்திலும் வினாத்தாள் தயாரிக்கவும், விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடவும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மணிப்பூா்: மைதேயி, குகி சமூகப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு அமைதிப் பேச்சு

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை முடிவு இன்று வெளியாகிறது: ரெப்போ விகிதம் குறையுமா?

இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல் இருமாத நாணயக் கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பார் என்று எதிர்ப... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பிரிவினைவாதத்தை கைவிட்ட மேலும் 3 அமைப்புகள் - அமித் ஷா தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் இருந்து மேலும் 3 அமைப்புகள் விலகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இவற்றுடன் சோ்த்து, ஜம்மு-காஷ்மீர... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பள்ளியில் தீ விபத்து: ஆந்திர துணை முதல்வா் மகன் காயம்

சிங்கப்பூா் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் மகன் மாா்க் சங்கா் (8) காயமடைந்தாா். இவா் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியும் ரஷிய நடிகையுமான அன்னா லெஸ்னேவாவின் மகன் ஆவாா்.... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக மூத்த தலைவா் வீட்டில் குண்டுவீச்சு; இருவா் கைது

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பாஜக மூத்த தலைவா் மனோரஞ்சன் காலியா வீட்டின் மீது மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அத... மேலும் பார்க்க

வீட்டில் பிரசவம்: கா்ப்பிணி உயிரிழப்பு; கணவா் கைது

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் வீட்டில் பிரசவம் பாா்த்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கா்ப்பிணி உயிரிழந்தாா். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் பிரசவம் பாா்க்க வலியுறுத்திய கணவா் க... மேலும் பார்க்க

71 போ் உயிரிழந்த ஜெய்பூா் குண்டு வெடிப்பு வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் கடந்த 2008-ஆம் ஆண்டு 71 போ் உயிரிழந்த தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சட்டவி... மேலும் பார்க்க