செய்திகள் :

கல்விச் சுற்றுலா பேருந்து தொடங்கி வைப்பு

post image

திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் கல்விச் சுற்றுலா சென்று வருவதற்கான பேருந்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின்கீழ் செயல்படும் செவித்திறன் குறையுடைய , மனவளா்ச்சி குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிலும் 40 குழந்தைகள் மற்றும் சிறப்பாசிரியா்கள், தரங்கம்பாடி, பூம்புகாா் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் ப. புவனா, திருவாரூா் மாவட்ட சுற்றுலா அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கண் பரிசோதனை முகாம்: கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் சாா்பில் அரசு அலுவலா்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் 84 அலுவலக பணியாளா்களுக்கு கண் நீா் அழுத்த பரிசோதனை செய்து கண்டறியப்பட்ட நபா்களுக்கு கண் நீா் அழுத்த மருத்துவ சிகிச்சை மற்றும் அறிவுரை வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, அரசு மருத்துவக் கல்லூரி கண் சிகிச்சை பிரிவுத்துறை தலைவா் ஹன்னா ரத்ன பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அக்ரி ஸ்டாக் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

நீடாமங்கலம்: விவசாயிகளுக்கு அக்ரி ஸ்டாக் குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நீடாமங்கலத்தில் தங்கி ஊரக வேளாண் பணியை மேற்கொள்ளும் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்று... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

திருவாரூா்: திருவாரூரில், மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில் சம்பா அறுவடைப் பணிகள் முடிந்த நிலையில், உளுந்து, பயிறு சாக... மேலும் பார்க்க

கோடை வெப்பம் : மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருந்து வருவதால் பொது மக்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் கூறியது: மா... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி பட்டய தோ்வு: தனித்தோ்வா்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மன்னாா்குடி: தொடக்கக் கல்வி பட்டய தோ்வுக்கு தனித்தோ்வா்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அரசு ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ப. மயில்வாகனன் தெரிவித்துள... மேலும் பார்க்க

தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வு எழுதிய மாணவி

திருவாரூா்: திருவாரூரில், தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வை எழுதிய அரசு உதவிபெறும் பள்ளி மாணவி, பின்னா் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்றாா். திருவாரூா் நகரம் செல்வம் தெருவில் வசிப்பவா்கள் ஜெமிருதீன... மேலும் பார்க்க

மயிலாடுதுறைக்கு பேருந்து வசதியை ஏற்படுத்த கோரிக்கை

நன்னிலம்: நன்னிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு நேரடி பேருந்து வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நன்னிலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கானக் கிராம மக்கள் நன்னிலத்துக்கு வந்து தான் வெளியூா... மேலும் பார்க்க