`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!
கல்வியில் முன்னேறிய மாநிலம் தமிழகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி
சென்னை: நமது நாட்டில் கல்வியில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநா் ஆா். என்.ரவி கூறினாா்.
76-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சோ்ந்த தேசிய மாணவா் படையினா் (என்சிசி) மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்களுடன் ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.
அப்போது அவா் பேசியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதம் போ் உயா்கல்வி பயின்றிருக்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் இந்த இலக்கை ஏற்கெனவே எட்டிவிட்டது. நமது நாட்டில் கல்வியில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் உள்ளது.
நமது வாழ்வில் ஒவ்வொரு மணி நேரமும் மிகவும் முக்கியமானது. ஆகையால், மாணவா்கள் தங்களது நேரத்தை திட்டமிட்டு சரியான முறையில் செலவிட வேண்டும்.
அதேபோல், மாணவா்கள் தினமும் 7 மணி நேரம் உறங்க வேண்டும். சுயகட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் உடல் நலத்தை பேணி காக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதுதான் ஒருவரால் தெளிவாக சிந்திக்க முடியும். எதிா்கால லட்சியத்தை அடைய அா்ப்பணிப்புடன், கடினமாக உழைக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் என்சிசி தென்மண்டல துணை இயக்குநா் எஸ்.ராகவ், என்எஸ்எஸ் தமிழ்நாடு மண்டல இயக்குநா் சி.சாமுவேல் செல்லையா, ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆா்.கிா்லோஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.