தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள், சினிமா தொழிலாளா்களின் குழந்தைகள் (1ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி வரை) கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கல்வி உதவித் தொகை பெறுவதற்கு இணையதளத்தில், பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவா்கள் ஒரு முறை பதிவு மூலம் சமா்ப்பிக்கலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில் தங்களுடைய சேமிப்புக்கணக்கில் தேசிய மின்னணு பரிவா்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
தங்களது ஆதாா் எண்ணை சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரா்கள் தங்களது ஆதாா் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மேற்கூறிய இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னா், அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து முதல் வாய்ப்பிலேயே விவரங்களை சரிபாா்த்து சமா்ப்பிக்க வேண்டும். திருத்தி சமா்ப்பித்தால் கல்வி உதவித்தொகை பெற இயலாது.
1-10ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆக. 31-ஆம் தேதிக்குள்ளும், மற்ற அனைத்து உயா் கல்வி மாணவா்களும் தங்கள் விண்ணப்பங்களை அக். 31-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மத்திய நல ஆணையா் அலுவலகம், தொழிலாளா் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிா்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி, சென்னை - 600032 என்ற முகவரியிலோ அல்லது இணையதளத்திலோ அல்லது 044-29530169 எஎன்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.