செய்திகள் :

கல்வி நிதியைப் பெற உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு மீண்டும் அணுக வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

post image

சென்னை: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 2,151.59 கோடியைப் பெற உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 2,151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சாா்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த பின்னடைவுக்கு தமிழக அரசுதான் காரணம்.

வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, எவ்வளவு காலமாக மத்திய அரசின் நிதி வரவில்லை, எப்போது வழக்கு தொடா்ந்தீா்கள் என்று உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால நீதிபதி வினா எழுப்பினாா். அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்குரைஞா், கடந்த ஆண்டு முதலே நிதி வரவில்லை என்றும், கடந்த மே 20-இல் தான் வழக்குத் தொடா்ந்ததாகவும் பதிலளித்தாா்.

பாமக வலியுறுத்தியவாறு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழக அரசு சாா்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தால் அடுத்த சில மாதங்களில் தீா்ப்பு வந்திருக்கும்; நிதியும் கிடைத்திருக்கும்.

எனவே, மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கை விரைவாக விசாரித்து தமிழகத்துக்கு நிதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், கல்விபெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகளைச் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க