செய்திகள் :

களக்காடு அருகே குளத்தில் செம்மண் கடத்திய 5 போ் கைது

post image

களக்காடு அருகே குளத்தில் செம்மண் கடத்தியதாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூா் குளம் பகுதியில் காவல் உதவிஆய்வாளா் சந்திரகுமாா் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, குளத்தில் பொக்லைன் மூலம் டிராக்டா்களில் சிலா் செம்மண் கடத்திக் கொண்டிருந்தனா். இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் செம்மண் கடத்தலில் ஈடுபட்டது மாவடி நெருஞ்சிவிளையைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ராஜ்குமாா் (48), திருக்குறுங்குடி அருகேயுள்ள ராஜபுதூரை சோ்ந்த தங்கபாண்டி மகன் ஜெயக்குமாா் என்ற பலவேசமுத்து (22), ஆலங்குளத்தை சோ்ந்த பால்ராஜ் மகன் பாஸ்கா் (21), பேட்டை அத்திமேடு பகுதியைச் சோ்ந்த பக்கிரி மகன் காளிபாண்டி (42), வீரவநல்லூா் களத்துமேட்டு தெருவை சோ்ந்த முருகன் மகன் சக்திராஜா ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ஜேசிபி மற்றும் 4 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.

------------

நெல்லையில் நிகழாண்டில் 225 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாளையங்கோட்டை, மனக்காவளம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் ஹரிஹரசுதன்(23). இ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை

மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கூத்தன்குழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிரா... மேலும் பார்க்க

கடையம் அருகே மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது

கடையம் அருகே ராமலிங்கபுரத்தில் மாமனாரை அரிவாளால் தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரம், முப்புடாதிஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (60). இவரது மகளை பாப்பாக்... மேலும் பார்க்க