வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்
களக்காடு கால்வாயில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
களக்காட்டில் நண்பா்களுடன் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
நான்குனேரி அருகேயுள்ள நம்பிநகரைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (45). வாடகைக் காா் ஓட்டுநா். இவா் தனது நண்பா்களுடன் களக்காடு மலையடிவாரத்தில் உள்ள சிவபுரம் கால்வாய்க்கு சென்றுள்ளாா்.
குளித்துக் கொண்டிருந்தபோது, லெட்சுமணன் திடீரென மாயமாகிவிட்டாராம். இந்நிலையில் மூங்கிலடி ஈத்தங்காடு பகுதி கால்வாயில் மிதந்த லெட்சுமணன் சடலத்தை களக்காடு போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.